Latest News

  

கொரோனாவால் இறந்த தந்தையின் உடலை பார்க்க மகனிடம் ரூ 51,000 லஞ்சம் கேட்ட மருத்துவமனை

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த ஒருவரின் உடலைக் காட்ட மருத்துவமனை நிர்வாகம் அவர் மகனிடம் ரூ 51,000 லஞ்சம் கேட்ட சம்பவம் நடந்துள்ளது.மேற்கு வங்க மாநிலம் ஜிப்பூரைச் சேர்ந்தவர் சாகர் குப்தா. இவர் ஹரி குப்தா தந்தை சென்ற சனியன்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதியவர் இறந்து பல மணிநேரம் ஆகியும் அவரது மகன் சாகர் குப்தாவுக்கு பல மணி நேரம் ஆகியும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.இந்நிலையில் ஞாயிறு மதியம் மருத்துவமனையிலிருந்து அவர் இரவு 1 மணிக்கு இறந்து விட்டதாக போன் செய்துள்ளனர். ஏன் முன்னதாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கேட்டதற்கு எங்களிடம் தொடர்பு கொள்ள முகவரி இல்லை என்று அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினருடன் பதட்டத்துடனும், அழுகையுடனும் மருத்துவமனை சென்றனர். அங்கு அவர் உடலை பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் உடல் தகனம் செய்யும் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டதாக கூறியுள்ளனர். மயானம் சென்ற குடும்பத்தினரிடம் அவர் உடலை பார்க்க மருத்துவமனை ஊழியர்கள் ரூ 51,000 லஞ்சம் கேட்டுள்ளனர். இதனையடுத்து குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று தொகையினை ரூ 31,000 ஆக குறைத்தனர்.இதையடுத்து முதியவரின் குடும்பத்தினர் போலீசை அணுகி உள்ளனர்.

தகவலறிந்து மயானம் வந்த போலீசாரிடமும் மருத்துவமனை ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசாரிடம், உங்கள் மேலதிகாரிகளை வரச் சொல்லுங்கள் என்று திமிராக பேசியுள்ளனர்.இந்நிகழ்வுகளை மொபைலில் படம் எடுத்த குடும்பத்தினரின் மொபைலையும் அவர்கள் பறித்து கொண்டனர். இறுதியில் குடும்பத்தினரிடம் காட்டாமலேயே இறந்தவரின் உடலை தகனம் செய்து விட்டனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம், இறந்தவரின் முகவரி தெரியாத காரணத்தால், தாங்களே உடம்பை தகனம் செய்து விட்டதாக கூறி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து முறையாக போலீசில் புகார் செய்ய சாகர் குப்தா குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.