
மனநலம் பாதித்த தாயுடன் வறுமையில் வசித்து வந்த பெண்ணிற்கு அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவை நினைவாக்க உதவும் காவல் கண்காணிப்பாளர்
புதுக்கோட்டை
மாவட்டத்தை சேர்ந்த சத்யா என்பவர் தந்தை இறந்து விட்ட நிலையில், மனநலம்
பாதிக்கப்பட்ட தாயுடன் வறுமையில் வசித்து கொண்டு வந்தார். பன்னிரண்டாம்
வகுப்பு படித்து முடித்தும், ஏழ்மையின் காரணமாக மேற்கொண்டு படிப்பை தொடர
முடியாத நிலையை அறிந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
முனைவர்.லோக. பாலாஜி சரவணன் அவர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.
செந்தில்குமார் ஆகியோர் 04.09.2020 -ம் தேதியன்று சத்யாவின் வீட்டிற்கு
நேரில் சென்று ஆறுதல் கூறியும், தேவையான அடிப்படை உதவிகளை செய்தும்,
அந்தப்பெண்ணின் மேற்படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து
கொடுப்பதாகவும் மற்றும் மனநலம் பாதித்த அவரது தாயாருக்கு தேவையான மருத்துவ
உதவிகளை ஏற்பாடு செய்து தருவதாக ஆறுதல் கூறினார். அரசு அதிகாரி ஆக வேண்டும்
என்ற கனவுடன் 12ம் வகுப்பு படித்து முடித்த எனக்கு இச்சூழ்நிலையில்
உதவியதற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment