தமிழக முதல்–அமைச்சரின் வெள்ளசேத நிவாரண நிதிக்கு தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் ரூ.35 லட்சம் வழங்குவதாக அறிவித்தனர்.
நிதி உதவி
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்குமேல் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நகரில் மழைவெள்ளம் புகுந்து மக்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது.இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திரையுலகினர், முதல்–அமைச்சரின் வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார்கள். நடிகர்கள் ரஜினிகாந்த் ரூ.10 லட்சமும், சூர்யா, கார்த்தி ரூ.25 லட்சமும், விஷால் ரூ.10 லட்சமும், விக்ரம் பிரபு ரூ.5 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.5 லட்சமும் வழங்கியுள்ளனர். தனுஷ் ரூ.5 லட்சமும், சத்யராஜ், சிபிராஜ் ரூ.2 லட்சத்து 25 ஆயிரமும் வழங்கி இருக்கிறார்கள்.
தெலுங்கு நடிகர்கள்
தற்போது தெலுங்கு நடிகர்களும், முதல்–அமைச்சரின் வெள்ள நிவாரணத்துக்கு நிதி வழங்கியுள்ளார்கள். தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சமும், ஜூனியர் என்.டி.ஆர். ரூ.10 லட்சமும் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment