படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டுக்காக போராடிய ஹர்திக் படேல் குஜராத்தை விட்டு 6 மாதங்களுக்கு வெளியே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அம்மாநில உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
குஜராத்தில் அரசு வேலைகள் மற்றும் உயர்கல்விகளில் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று ஹர்திக் படேல் என்ற இளைஞர் போராட்டத்தை தொடங்கினார். போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகவும், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் ஹர்திக் படேல் மீது குற்றம்சாட்டப்பட்டது.
குஜராத்தில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக சூரத்தில் மிகப்பெரும் கிளர்ச்சியை நடத்தி ஹர்திக் படேல் மீது தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹர்திக் படேல், குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அப்போது, தனக்கு விடுதலை அளிக்கப்பட்டால் வன்முறையின்றி அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுப்பேன் என்று ஹர்திக் படேல் நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், ஹர்திக் படேல் குஜராத்தை விட்டு 6 மாதங்களுக்கு வெளியே இருக்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, ஹர்திக் படேல் மீது மேலும் சில வழக்குகள் இருப்பதால் அவரால் தற்போது சிறையில் இருந்து வெளிவர முடியாது என்று ஹர்திக் படேல் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் அரசு வேலைகள் மற்றும் உயர்கல்விகளில் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று ஹர்திக் படேல் என்ற இளைஞர் போராட்டத்தை தொடங்கினார். போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகவும், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் ஹர்திக் படேல் மீது குற்றம்சாட்டப்பட்டது.
குஜராத்தில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக சூரத்தில் மிகப்பெரும் கிளர்ச்சியை நடத்தி ஹர்திக் படேல் மீது தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹர்திக் படேல், குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அப்போது, தனக்கு விடுதலை அளிக்கப்பட்டால் வன்முறையின்றி அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுப்பேன் என்று ஹர்திக் படேல் நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், ஹர்திக் படேல் குஜராத்தை விட்டு 6 மாதங்களுக்கு வெளியே இருக்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, ஹர்திக் படேல் மீது மேலும் சில வழக்குகள் இருப்பதால் அவரால் தற்போது சிறையில் இருந்து வெளிவர முடியாது என்று ஹர்திக் படேல் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
நன்றி : ஆனந்த விகடன்


No comments:
Post a Comment