Latest News

இந்தோனேசியாவில் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம்: ட்ரம்ப் உருவப் படம் எரிப்பு



இந்தோனேசிய தலைநகரான ஜகர்தாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட  இந்தோனேசியர்கள்  அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு  ட்ரம்ப்பின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க முடிவெடுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக கண்டனம் தெரிவித்து பாலஸ்தீனன், துருக்கி, ஆகிய நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தோனேசியாவில் அமெரிக்க தூதரகத்தின் முன் ஞாயிற்றுக்கிழமை முதல் 10,00க்கும் மேற்பட்ட மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டங்களில் ஈடுபட்ட மக்கள், அமெரிக்காவின் தேசியக் கொடி மற்றும் ட்ரம்பின் உருவப் படத்தை எரித்து, ”நாங்கள் இங்கு அமெரிக்காவுக்கு எங்களது எதிர்ப்பை தெரிவிப்பதற்காக கூடி இருக்கிறோம்.  ஜெருசலத்திலிருந்து அமெரிக்க தூதரகமே வெளியேறு... ஜெருசலத்தையும், பாலஸ்தீனர்களையும் சுதந்திரமாக இருக்கவிடு, நாங்கள் பாலசஸ்தீனத்திடம் இருக்கிறோம்” என்று முழக்கமிட்டனர்.

இந்தப் போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.