Latest News

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை


அமெரிக்காவின் சிகாகோ நகரில் இந்தியாவைச் சேர்ந்த பொறியியல் மாணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் முகமது அக்பர். இவர் சிகாகோவிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.
இந்நிலையில் சிகாகோவுக்கு அருகேயுள்ள அல்பனை பார்க்கில் சனிக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகமது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முகமது அக்பரின் தந்தை முகமது யூசப், தன் மகனின் உடலை இந்தியாவுக்கு எடுத்து வருவது தொடர்பாக தெலுங்கானா உள்துறை அமைச்சர் நரசிம்மா ரெட்டியை சந்தித்து உதவி கேட்டுள்ளார்.

முகமது துப்பாக்கியால் சுடப்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இதுகுறித்து அமெரிக்க போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.