காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதாக இன்று (திங்கள்) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ்
தலைவர் சோனியா காந்தி கடந்த 17 ஆண்டுகளாக அப்பதவியில் உள்ளார்.
சமீபகாலமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் துணைத்
தலைவராக இருந்துவரும் ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் என்று காங்கிரஸ்
நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல்கள் நடந்து முடிந்ததையடுத்து, தலைவர்
பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு கடந்த 1-ம் தேதி
வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ராகுல் காந்தி கடந்த 4-ம் தேதி வேட்புமனுவை
தாக்கல் செய்தார். மொத்தம் தாக்கலான 89 வேட்புமனுக்களும் ராகுலை தலைவர்
பதவிக்கு அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டன.
ஒன்றுக்கு
மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் 16-ம் தேதி தேர்தல் நடக்கும் என்றும் 19-ம்
தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று
கூறப்பட்டிருந்தது. மனுக்களை வாபஸ் பெற 11-ம் தேதி (இன்று) கடைசி நாள்
என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ராகுலைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் பொறுப்பாளர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறியதாவது:
"ராகுல்
காந்தியை தலைவர் பதவிக்கு முன்னிறுத்தி மொத்தம் 89 வேட்புமனுக்கள்
தாக்கலாகின. அவரைத் தவிர யாரும் போட்டியிடாததால், காங்கிரஸ் தலைவராக ராகுல்
காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வேட்புமனு பரிசீலனை
முடிந்ததால் அவர் போட்டியிடன்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக
அறிவிக்கப்படுகிறது" எனக் கூறினார்.
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி
தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வரும் 16-ம் தேதி சோனியா காந்தியின்
முன்னிலையில் ராகுலிடம் வழங்கப்படுகிறது. அன்றைய தினமே அவர் தலைவர் பதவியை
ஏற்கக்கூடும் எனத் தெரிகிறது.
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி
அறிவிக்கப்பட்டதை, டெல்லி உட்பட பல நகரங்களில் காங்கிரஸ் தொண்டர்கள்
திரண்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர். அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள்
ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment