Latest News

சேரில் உட்கார்ந்தார் ஜெ.... இயற்கையாக சுவாசித்தார்!

 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெகுநேரம் அவர் நாற்காலியில் அமர்ந்திருந்ததாகவும், இயல்பாக சுவாசித்ததாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து 50வது நாளாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். விரைவில் அவர் பூரண நலமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அதிமுகவினர் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஜெயலலிதாவின் உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெகுநேரம் அவர் நாற்காலியில் அமர்ந்திருந்ததாகவும், அந்த நேரத்தில் 'டிரக்கியாஸ்டமி' சிகிச்சை முறையில் மேற்கொள்ளப்படும் செயற்கை சுவாச குழாய் இல்லாமல், இயல்பாகவே அவர் சுவாசித்ததாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.