அரக்கோணம் : தனது 2 குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்று விட்டு தாயும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேலூர் மாவட்டம், அரக்கோணம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(32). சென்னையில் அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி திவ்யா(26). இவர்களுக்கு நிதீஷ்கண்ணா(3) மகன், ஒன்றரை வயதில் அம்மு என்ற பெண் குழந்தையும் இருந்தனர். நேற்று மாலை வீட்டின் வெளியே சிவக்குமார் நின்றுக்கொண்டிருந்தபோது திடீரென வீட்டின் உள்ளே இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்ட சிவக்குமார் மற்றும் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். உள்ளே திவ்யா மற்றும் 2 குழந்தை களின் உடலில் தீப்பற்றி எரிந்து ெகாண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தீயை அணைத்து அவர்களை அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நிதிஷ் கண்ணா பரிதாபமாக இறந்தான். திவ்யா, குழந்தை அம்மு ஆகியோரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை அம்மு பரிதாபமாக இறந்தது. ஆபத்தான நிலையில் உள்ள திவ்யாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அரக்கோணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்துகின்றனர். குழந்தைகளை தீ வைத்து கொன்று தாய் தற்கொலைக்கு முயன்றது ஏன் என போலீசார் விசாரிக்கின்றனர்.


No comments:
Post a Comment