
நான் கட்சிப் பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது. கட்சியை அழிய விடமாட்டேன். விரைவில் தொண்டர்களை சந்திக்க வருகிறேன் எனசசிகலா மீண்டும் தெரிவித்துள்ளார்.
சசிகலா தொடர்ந்து தொண்டர்களுடன் பேசி வரும் நிலையில், நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மதுரையை சேர்ந்த குபேந்திரன் என்ற ஆதரவாளரிடம் சசிகலா நேற்று பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:
கட்சிக்காரர்கள் எல்லாம் மிகவும் வருத்தப்படுகிறீர்கள். தொண்டர்கள் எல்லாரும் என்னுடன் இருக்கும்போது, கட்சியை அழிய விடமாட்டேன். விரைவில் தொண்டர்களை சந்திக்க வருகிறேன்.
1987-ம் ஆண்டு எம்ஜிஆர் இறந்தபோது ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சினையை உடன் இருந்து எதிர்கொண்டுள்ளேன். அதில் இருந்து மீண்டு வந்துதான் ஆட்சியை அமைத்தோம்.
எனவே, இவர்கள் (ஓபிஎஸ், இபிஎஸ்) செய்வது எல்லாம் எனக்கு புதிது இல்லை.
ஜெயலலிதாபோல நாமும் தொண்டர்களுடன் வந்து காட்டி, ஆட்சியையும் அமைப்போம்.
நான் கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment