
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை
தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 3756 பேர்களுக்கு
புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக
உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 3756 பேர்களில் 1261 பேர்கள்
சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு
அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 72500 ஆக உயர்ந்துள்ளது என்பதும்
குறிப்பிடத்தக்கது. சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 2000ஐ
குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 64 பேர்
பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1700 ஆக உயர்ந்துள்ளது
என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 3051 பேர்
கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதால் கொரோனாவில் இருந்து தமிழகத்தில்
மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 74,167 என உயர்ந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தில் இன்று 35979 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் 14,49,414 பேர்களுக்கு மொத்தம் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

No comments:
Post a Comment