
`கொரோனா விவகாரத்தில் நான் கடுமையா வேலை செஞ்சதால என்னை முதல்வர்
கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்கிறார். நீங்க நினைக்கிற மாதிரி
எல்லாம் இல்லை' என தன்னைச் சந்திக்க வரும் நிர்வாகிகளை சமாளித்துக்
கொண்டிருக்கிறாராம் விஜயபாஸ்கர்.

தமிழ்நாட்டில்
கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்த நாளிலிருந்து, தொடர்ச்சியாகப்
பத்திரிகையாளர்களைச் சந்தித்து வந்தவர் விஜயபாஸ்கர்.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள், மருத்துவமனைகளுக்கு
விசிட் எனப் படுபிஸியாக பணியாற்றி வந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்
எத்தனை பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் விவரம்
போன்றவற்றைத் தனது ட்விட்டர் பக்கத்திலும் அடிக்கடி பதிந்து வந்தார். அதைத்
தொடர்ந்து தினமும் தவறாமல் பத்திரிகையாளர்களைச்
சந்தித்துக்கொண்டிருந்தார்.
கொரோனா தொடர்பான அப்டேட்கள் அனைத்தும்
விஜயபாஸ்கர் மூலமே வெளிப்பட்டன. மற்ற அதிகாரிகள் யாரும் அதுபற்றிப் பேசாமல்
அமைதியாக இருந்தனர். விஜயபாஸ்கர் பிரஸ்மீட் நடத்தும்போது சுகாதாரத்துறை
செயலாளரான பீலா ராஜேஷ் மட்டுமே அருகில் இருப்பார். ஆனால், இப்போது நிலைமை
தலைகீழாக மாறிவிட்டது என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.
தற்போது
பத்திரிகையாளர் சந்திப்புகளை பீலா ராஜேஷ் நடத்திக் கொண்டிருகிறார்.
தற்போது தொகுதி மக்களுக்கு நிவாரண உதவி அளிப்பது, கட்சி நிர்வாகிகளை
சந்திப்பது எனப் பிஸியாக இருக்கிறார். இதனால் மாவட்டத்தில் தன்னைச்
சந்திக்க வரும் நிர்வாகிகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறி வருகிறார்
விஜயபாஸ்கர்.
``
கமிஷன் விவகாரம் மற்றும் முதலமைச்சரை பீட் பண்ணும் வேலையில் ஈடுபட்டதால்
அவரை ஓரங்கட்டியிருப்பதாகச் சொல்கிறார்கள். அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்தத்
தொகுதியான புதுக்கோட்டைக்கு வந்து ஆரம்பச் சுகாதார நிலையம், அரசு
மருத்துவமனை, உழவர் சந்தை என மாவட்டத்தில் நடக்கும் பிரச்னைகளில் கவனம்
செலுத்தி வருகிறார்.
அவரது தொகுதியான விராலிமலையில் சில
கிராமங்களுக்குச் சென்று 1,000 ரூபாய் பணம் மற்றும் மளிகைப் பொருள்களை வீடு
வீடாகச் சென்று நேரடியாகக் கொடுத்து வருகிறார். பின்னர், தனது எம்.எல்.ஏ
அலுவலகத்துக்கு வந்தார்.
அப்போது
அவரிடம் பேசிய கட்சி நிர்வாகிகளிடம், `` நான் கொரோனா விவகாரத்தில் கடுமையா
வேலை பார்த்ததால் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நீ
கொஞ்சம் ரெஸ்ட் எடுன்னு முதல்வர் கூறிவிட்டார். தவிர, உன் தொகுதி மக்களை
கவனிச்சிக்கோன்னு சொல்லி அனுப்பியதால்தான் இங்கு வந்திருக்கிறேன்.
அவ்வளவுதான். வேற ஒண்ணும் இல்லை" எனச் சமாளித்து வருகிறார்.
No comments:
Post a Comment