
தமிழகம் முழுவதும் உதவி ஆணையர்கள் மற்றும் டி.எஸ்.பி.க்கள் உள்பட 14
அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ள உத்தரவில்
கூறியிருப்பதாவது ;
சென்னையில் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக
இருந்த அசோகன், எழும்பூர் சட்டம் , ஒழுங்கு உதவி ஆணையராக இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளார். செக்யூரிட்டி சென்னை உதவி ஆணையரான ஹரிகுமார்,
எம்.கே.பி. நகர் உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல,
எம்.கே.பி. நகர் உதவி ஆணையர் முத்துக்குமார், புழல் உதவி ஆணையராக
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட குற்ற ஆவணக் காப்பக
டிஎஸ்பியாக இருந்த தனராசு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் சப் -
டிவிஷன் டிஎஸ்பியாக நியமிக்கப்படுகிறார்.
சென்னை சிபிசிஐடி டிஎஸ்பியான ஜீவானந்தம், பரங்கிமலை உதவி ஆணையராக செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல,
பரங்கிமலை உதவி ஆணையரான சங்கரநாராயணன், சென்னை மாநில குற்ற ஆவணக் காப்பக
டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பூக்கடை உதவி ஆணையராக இருந்த
லட்சுமணன், சென்னை காவல் ஆணையர் அலுவலக நவீன கட்டுப்பாட்டு அறை உதவி
ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில மனித உரிமை ஆணைய டிஎஸ்பியான
பாலகிருஷ்ண பிரபு, பூக்கடை உதவி ஆணையராக பணியாற்றுவார் என
அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கமாண்டோ பிரிவு டிஎஸ்பியாக இருந்த
சுந்தரேசன், மாநில மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாக பொறுப்பேற்க உள்ளார்.
விழுப்புரம், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பியான விஜயராமன்,
தமிழ்நாடு கமாண்டோ படை, சென்னை டிஎஸ்பியாக இடம் மாற்றப்பட்டுள்ளார்.
கோவை
சரக பயிற்சி மைய டிஎஸ்பியான நாகராஜன், சேலம் நகர மேற்கு சட்டம்-ஒழுங்கு
உதவி ஆணையராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மேற்கு சட்டம்
ஒழுங்கு உதவி ஆணையர் செல்வராஜ், சேலம் நுண்ணறிவுப் பிரிவு டிஎஸ்பியாகவும்,
மாற்றப்பட்டுள்ளார். சீ
ருடைப் பணியாளர் தேர்வாணைய சென்னை
டிஎஸ்பியான ஜரீனா பேகம், பெண்கள் மற்றும் சென்னை குழந்தைகளுக்கு எதிரான
குற்றத்தடுப்புப் பிரிவு டிஎஸ்பியாகவும், சிபிசிஐடி, சென்னை டிஎஸ்பியான
சிவனுபாண்டியன், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய டிஎஸ்பியாகவும்
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Newstm.in
No comments:
Post a Comment