Latest News

தமிழகத்தில் மேலும் 48பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 738ஆக உயர்வு!!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14லட்சத்து 47ஆயிரத்தை கடந்துள்ளது. 83ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் 5,480 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 218 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 690பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ஆக அதிகரித்துள்ளது.குறிப்பாக கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நபர்கள் மூலமாகவே அதிக அளவில் பரவியிருக்கிறது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 600க்கும் மேற்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள நபர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், "இன்று மேலும் 48 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 42 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்றுவந்தவர்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 679 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்றுவந்தவர்கள். இதுவரை தமிழகத்தில் 8பேர் உயிரிழந்த நிலையில், 21பேர் குணமடைந்துள்ளனர்." என கூறினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.