Latest News

  

காகிதத்தில் 24 மணிநேரம் கொரோனா வாழும்! செய்திதாள்களை தடை பண்ணுங்க.... உயர்நீதிமன்றத்தின் அதிரடி பதில்

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு, ஊரடங்கு காலத்தில் செய்தித்தாள்களுக்கு விலக்கு அளித்துள்ளது. இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த கணேசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அவரது மனுவில் செய்தித்தாள்களுக்கு விலக்களிக்கும் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், செய்தித்தாள் நிறுவனங்கள் இணையதளங்கள் மூலமாகச் செய்திகளை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ' காகிதத்தில் கொரோனா வைரஸ் 24 மணிநேரம் வரை உயிருடன் இருக்கும் என்பதால், செய்தித்தாள்களுக்கு விலக்களித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என வாதிடப்பட்டது.
இந்த வாதத்திற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசுத் தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ஆரம்பக்கட்ட ஆய்வுகளில் செய்தித்தாள் கொரோனா பரவுவதாக கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதிமன்ற வழக்கு கோப்புகள் அனைத்தும் காகிதத்தில்தான் உள்ளன. பணம் காகிதம் தான், அனைத்து மக்களும் பயன்படுத்தி வரும் நிலையில், காகிதம் மூலம் கொரோனா பரவலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.