
58 சங்கங்களில் 1218 நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான 4-ஆம் கட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல் செப்டம்பர் 16-ஆம் தேதி நடைபெறும் என்று கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
348 இடங்கள் பெண்களுக்கும், 232 இடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வேட்புமனுத்தாக்கல் செப்.,9, வேட்புமனு பரிசீலனை செப்.,11, திரும்பபெறுதல் மற்றும் இறுதிவேட்பாளர் பட்டியல் செப்.,12-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், செப்.,17-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் எனவும் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
newstm.in
No comments:
Post a Comment