
புதுடில்லி: மத்திய பிரதேசத்தை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர், நாடு முழுவதும் கடந்த மூன்றாண்டுகளில் ரயிலில் ஓசிப்பயணம் மேற்கொண்டவர்களிடம் எவ்வளவு தொகை அபராதமாக வசூலிக்கப்பட்டது என ரயில்வாரியத்திடம் தகவல் கேட்டறிருந்தார்.அதற்கு ரயில்வே வாரியம் அளித்துள்ள தகவலில், நாடு முழுவதும் ரயில் டிக்கெட் இன்றி பயணித்தவர்களிடம் அபராதமாக கடந்த 2016-17-ம் ஆண்டுகளில் ரூ. 405.30 கோடியும், 2017-18-ம் ஆண்டுகளில் 441.62 கோடியும், 2018-19-ம் ஆண்டுகளில் ரூ. 530.06 கோடி என மூன்று ஆண்டுகளில் ரூ.1,377 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.ரயிலில் டிக்கெட்டின்றி பயணிக்கும் நபர்களிடம் ரயில்வே பாதுகாப்பு படை சட்டம் பிரிவு 137-ன் கீழ் குறைந்த பட்சம் ரூ. 250 ம், அதிகபட்சமாக ரூ.1000 வசூலிக்கப்படுகிறது. அபராதம் செலுத்த முடியாதவர்களுக்கு குறைந்த பட்சம் 6 மாத சிறை தண்டனை உண்டு. இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment