Latest News

சென்னை-திருச்சி அடுத்தடுத்து போலீஸ் காவலில் முகிலன்

சென்னை, கரூர், திருச்சி என்று அடுத்தடுத்து போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் சமூக செயற்பாட்டாளர் முகிலன்.

பிப்ரவரி மாதம் சென்னையில் காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலன், அண்மையில் திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டார். பிறகு இவர் சென்னை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார், பிறகு அவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பிறகு இவர் மீது கரூரில் ஓர் பெண் பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து அந்த புகார் தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது நீதிபதி, ஜூலை 24வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதற்க்கு மறுப்பு தெரிவித்து, முகிலன், தனது உடல்நிலை சரியில்லை எனவும், ஆதலால் தனக்கு மருத்துமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என வற்புறுத்தினார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி சிறையில் இருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள் என கூறி உத்தரவிட்டதை அடுத்து, திருச்சி மத்திய சிறையில் முகிலன் அடைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.