சோழிங்கநல்லூர்:
நீலாங்கரை, கிழக்கு கடற்கரை சாலையில்
தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இங்கு கன்னியாகுமரியை சேர்ந்த
அந்தோணி (வயது27) என்பவர் விடுதியில் தங்கி ஆசிரியராக வேலைபார்த்து
வந்தார்.
இந்தநிலையில் இன்று காலை
வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது ஒரு வகுப்பறையில்
ஆசிரியர் அந்தோணி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். தகவல்
அறிந்ததும் நீலாங்கரை போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை
நடத்தினர். ஆசிரியர் தற்கொலையை அடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை
விடப்பட்டது.

No comments:
Post a Comment