Latest News

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மீன் வளத்துக்கு தனி அமைச்சகம்: ராகுல் காந்தி உறுதி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மீன் வளத் துறைக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.

கேரளாவின் திருச்சூரில் மீனவர்களுடன் அவர் நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசில் அனில் அம்பானி, நீரவ் மோடி போன்ற தொழிலதிபர்களுக்கு மதிப்பு அளிக்கப்படுகிறது. 10 விநாடிகளில் அவர்களால் பிரதமரை தொடர்பு கொண்டு என்ன சொல்ல வேண்டுமோ அதை சொல்ல முடிகிறது. அவர்கள் உரக்க குரல் எழுப்ப வேண்டிய அவசியமில்லை. மெல்லிய குரலில் பேசினால்கூட அந்த தகவல் பிரதமரை சென்றடைகிறது.

ஆனால் விவசாயிகள், மீனவர்கள், சிறு வியாபாரிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரக்க குரல் எழுப்புகிறார்கள். அவர்களுக்கு பிரதமர் செவிசாய்ப்பதே இல்லை.

நேர்மையற்றவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர்கள் பிரதமருக்கு உதவி செய்கிறார்கள். தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாடு செல்வதற்கு முன்பு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்துப் பேசியது ஏன்?
வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால் மீன் வளத்தை மேம்படுத்தவும் மீனவர்களின் நலனுக்காகவும் தனி அமைச்சகம் உருவாக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி போன்று நான் பொய் வாக்குறுதிகளை அளிப்பது இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.