மக்களவைத் தேர்தலில் போட்டியிட, தமிழகம் முழுவதும் இன்று 20 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
முதல்
நாளான இன்று தமிழகம் முழுவதும் 20 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல்
செய்துள்ளனர். இதில், அதிகபட்சமாக வடசென்னை தொகுதியில் 4 பேரும் ,
தென்சென்னை தொகுதியில் 3 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதேபோன்று, சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு 2 பேர் மட்டுமே இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
நாளை
பெளர்ணமி தினம் என்பதால், நாளை அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் மனு
தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 26 -ஆம் தேதி கடைசி
நாளாகும். அதன் பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் மார்ச் 29 -ஆம் தேதி
வெளியிடப்படும்.
newstm.in

No comments:
Post a Comment