 
                
ஆந்திர மாநிலம் 
குண்டூரில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டில் பங்கேற்க 
பிரதமர் மோடி நாளை மதியம் 3 மணி அளவில் ஆந்திராவிற்கு வருகை தருகிறார். 
இதற்கு மாநிலம் தழுவிய எதிர்ப்பு நிலவி வருகிறது. ஆந்திராவின் 
ஆளும்கட்சியான தெலுங்கு தேசத்தின் தலைவரும், மாநில முதல்வருமான சந்திரபாபு 
நாயுடு மோடியின் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். 
ஆந்திராவுக்கு பிப்ரவரி 10-ம் தேதி ஒரு கறுப்பு நாள் என்று அவர் 
கூறியுள்ளார். இந்நிலையில், மோடி வந்திறங்க உள்ள விஜயவாடா விமான 
நிலையத்தின் அருகில் மோடி எதிர்ப்பு பேனர்கள் அதிகளவில் வைக்கப்பட்டு 
உள்ளன.
 

 
No comments:
Post a Comment