Latest News

பிரேசில் சிறையில் பயங்கர கலவரம்... 60 கைதிகள் பலி

 
பிரேசில் நாட்டில் சிறைக்குள் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 60 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். பிரேசில் நாட்டின் அமேசான் மாகாணத்தில் மனாஸ் நகரில் போதை பொருள் விற்கும் கும்பலை அடைத்து வைக்கும் சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்தச் சிறையில் இன்று திடீரென கலவரம் ஏற்பட்டது.

சிறைக் கைதிகள் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல், பெரும் கலவரமாக மாறியது. இதில் கைதிகள் ஒருவருக்கொருவர் கண்மூடித்தனமாக தாக்கிக்கொண்டனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த சிறப்பு பாதுகாப்பு படையினர், கைதிகள்மீது தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் நடவடிக்கை மேற்கொண்டனர். இருப்பினும் இருதரப்பினரும் சரமாரியாக தாக்கிக்கொண்டதில் சுமார் 60 கைதிகள் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த மோதலில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.