Latest News

சேலம் அருகே சோகம்.. லாரி மோதியதில் போலீஸ் ஏட்டு, மனைவி, மகன்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி

 
சேலம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் போலீஸ் ஏட்டு, அவருடைய மனைவி, மகன்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் வெங்கடேசன். இவர் தனது மனைவி சுகுணா(35), மற்றும் மகன்கள் ஜெய்ஹரி (8), தஷ்வந்த் (6) ஆகியோருடன் தனது சொந்த ஊரான கள்ளிக்காட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.

இவரது இருசக்கர வாகனம் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கச்சுபள்ளி, எட்டிகுட்டை மேடு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற ஒரு காரை வெங்கடேசன் முந்தி செல்ல முயன்ற போது எதிரில் வந்த லாரி அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன், அவரது மனைவி சுகுணா, மகன்கள் ஜெய்ஹரி (8), தஷ்வந்த் (6) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களது உடலை கைப்பற்றி எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும். இது குறித்து எடப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.