Latest News

  

எம்.ஏ அப்­துல்லாஹ் ரஹ்­மானி ஆலிம்: வாழ்க்கை வரலாறு !



அதிராம்பட்டினம், அக்-12
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த மவ்லவி எம்.ஏ அப்­துல்லாஹ் ரஹ்­மானி அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து இலங்கை மௌலவி காத்­தான்­குடி பௌஸ் அதிபர், அல்­பலாஹ் குர்ஆன் மத்­ரஸா பாணந்துறை அவர்களால் தொகுக்கப்பட்ட கட்டுரை 'விடிவெள்ளி ஆன்லைன்' என்ற இணையதளத்தில் வெளியாகியது. அன்னார் இன்று மாலை இலங்கை, காத்தான்குடியில் வஃபாத்தாகிவிட்டார்கள். அன்னார் ஆற்றிய இஸ்லாமிய மார்க்கப் பணி குறித்து அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த கட்டுரையை நன்றியுடன் அப்படியே எடுத்து இங்கு மீள் பதிவு செய்கிறோம்.

இலங்­கையின் கிழக்கு மாகாணம் மட்­டக்­க­ளப்­பி­லி­ருந்து தெற்­காக ஐந்து கிலோ மீட்­டர் தொ­லைவில் அடைந்­து­விடக் கூடிய அற்­பு­த­மான ஊரே காத்­தான்­கு­டி­யாகும்.

இவ்­வூரின் இலட்­ச­ணத்­துக்கு ஆணி­வே­ராக அமைந்த கல்வித் தாபனம் மத்­ர­ஸதுல் பலாஹ் அரபுக் கல்­லூ­ரி­யாகும். இக் கல்­லூரி 1955 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டது.

காலியைப் பிறப்­பி­ட­மா­கவும் அட்­டா­ளைச்­சே­னையை வாழ்­வி­ட­மா­கவும் கொண்ட மர்ஹும் அப்­துல்லாஹ் ஆலிம் ஸாஹிப் அவர்கள் இதனை ஆரம்­பித்து வைத்­தார்கள். அன்று முதல் மார்க்க சட்­டங்­க­ளையும் அல்­குர்ஆன், அல்­ஹதீஸ், தப்ஸீர் விரி­வாக்கம் ஆகிய பாடங்­க­ளுடன் அரபு இலக்­கண, இலக்­கியம் அனைத்தும் பயிற்­று­விக்­கப்­பட்­டன.

அதி­பர்கள் விபரம்
இக் கல்­லூ­ரியின் ஆரம்ப அதி­ப­ராக காலியைச் சேர்ந்த மர்ஹூம் மௌலவி ஏ. அஹ்மத் ஆலிம் ஸாஹிப் அதன் பின்னர் அக்­கு­ற­ணையைச் சேர்ந்த மௌலவி எம்.ஏ.எம்.ஜே. ஸைனுல் ஆப்தீன் ஆலிம், காத்­தான்­கு­டியின் மூத்த உலமா மர்ஹூம் எஸ்.எம்.எம். முஸ்­தபா (கப்பல் ஆலிம்) ஆகியோர் பிரதி அதி­ப­ராகக் கட­மை­யாற்­றினர்.

அதன் பின்னால் அதி­ப­ராக தென் இந்­தியா அதிராம்பட்­டி­னத்தைச் சேர்ந்த மௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ. முஹம்­மது அப்­துல்லாஹ் (ரஹ்­மானி) அவர்கள் 1959 ஆம் ஆண்டு தனது கட­மையைப் பொறுப்­பேற்­றார்கள். இவர்­க­ளது அய­ராத முயற்­சி­யினால் காத்­தான்­கு­டியின் கண்­ணாக மத்­ர­ஸதுல் பலாஹ் விளங்க ஆரம்­பித்­தது.

பாட விரி­வாக்கம்
‘தப்ஸீர்” அல்­குர்ஆன் விரி­வாக்கம், ‘பிக்ஹு” மார்க்க சட்டக் கலை நுணுக்­கங்கள், ‘அகாயித்” சமய சித்­தாந்தம், ‘தஸவ்வுப்” பண்­பாட்டுக் கலை ‘உஸுல்” சட்ட மூலா­தாரம், ‘லுகத்” அரபு மொழி­ய­றிவு, ‘நஹ்வு” சொற்­பு­ணர்ச்சி இலக்­கியம் ‘ஸர்பு” சொல் இலக்­கண ஞானம்.

‘இல்முல் பயான்” உரை இலக்­கண ஞானம்,  யாப்­பி­லக்­கணம், அள­வியல் பேச்சு நுட்ப ‘மன்­தி­கையும்'' இன்னும் இது போன்ற பல கலை­க­ளையும் தாமாக முன்­னின்று அப்­துல்லாஹ் (ரஹ்­மானி) ஆலிம் அவர்கள் அதி­ப­ராக போத­க­ராகப் பயிற்­று­வித்­தார்கள்.

மௌலவி தரா­தரம்
இலங்கை அர­சாங்­கத்தின் கல்வி அமைச்­சினால் 17.11.1959  இல் இம் மத்­ரஸா பதி­யப்­பட்­டது. இதன் நிமித்தம் இதே ஆண்டு இக்­கல்­லூ­ரியில் மாண­வர்கள் தங்கிப் படிப்­ப­தற்­கான விடுதி வச­தியும் செய்­யப்­பட்­டது. இதன் பின்னால் நாட்டின்  நாலா பகு­தி­க­ளி­லி­ருந்தும் மாண­வர்­களின் வருகை அதி­க­ரித்­தது. பயிற்­று­விப்­பு­களும் சீராக நடை­பெற்­றன.

இதற்­க­மைய மத்­ர­ஸதுல் பலாஹ்வின் முத­லா­வது பட்­ட­ம­ளிப்பு விழா 18.01.1962 இல் மிகச் சிறப்­பாக நடை­பெற்­றது. முழு காத்­தான்­கு­டியும் கண்டு களிக்கும் அள­வுக்கு ஊர்­வ­ல­மாக மௌல­விமார் அழைத்து வரப்­பட்­டது அந்த நாட்­களில் அனை­வ­ரது கவ­னத்­தையும் ஈர்த்­தது.

அல்­குர்ஆன் மனன வகுப்பு
இலங்­கையில் முத­லா­வது அல்­குர்ஆன்  மனன ‘ஹிப்ழ்” வகுப்பு மத்­ர­ஸதுல் பலாஹ்­வில்தான் முத­லா­வ­தாக 18.12.1971 இல் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. இந்த வகுப்பை தென் இந்­தியா காயல் பட்­டி­னத்தைச் சேர்ந்த மர்ஹூம் மௌலானா, மௌலவி அல் ஹாபிழ் ரீ.எம்.கே. செய்யித் அஹ்மத் (முத்து வாப்பா) ஆலிம் அவர்கள் ஆரம்­பித்து வைத்­தார்கள்.

இந்த ‘ஹிப்ழ்’ பணிக்­காக அதிபர் அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள்  சம்­மாந்­து­றையைச் சேர்ந்த மௌலவி ஹாபிழ்  ஏ. ஹஜ்ஜி முஹம்மத் அவர்­களை  நிய­மித்­தார்கள்.

அய­ராத முயற்­சியின் கார­ண­மாக 1975 ஆம் ஆண்டு அல்குர் ஆனின் 6666 வச­னங்­க­ளையும் மனனம் செய்த ஹாபிழ்கள் குழு பட்டம் பெற்று வெளி­யே­றி­னார்கள். இந்த ஹாபிழ்கள் எதிர்­கால நலன்­க­ருதி இதே மத்­ர­ஸாவில் மௌலவி பயிற்சி நெறி­யையும்  எட்டு வரு­டங்கள் முடித்து வெளி­யே­றி­னார்கள்.

ஜாமி­அதுல் பலாஹ்!
மத்­ர­ஸதுல் பலாஹ் என்ற பெயரில் இயங்கி வந்த இக்­கல்­லூரி 1974 ஆம் ஆண்டு  ‘நூறுல் பலாஹ்’  என்ற இரு­ப­தாண்டுப் பூர்த்தி விழா மலர் ஒன்றை வெளி­யிட்­டது. அப்­போது நான் இக்­கல்­லூ­ரியில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயில்­கின்றேன்.

எனது இலக்­கிய ஆர்­வத்தைப் பயன்­ப­டுத்தி ‘முத்­தான குர்ஆன் ’ என்ற கவி­தையை மல­ருக்கு எழு­தினேன். இம்­ம­லரின் ஆசி­ரி­ய­ராக மௌலவி எம்.எச்.எம். புஹாரி பலாஹி செயற்­பட்டார்.

இந்த மலரின் பின்னர் ஏற்­பட்ட விழிப்­பு­ணர்வால் 1983 ஆம் ஆண்டு இக் கல்­லூ­ரி மத்­ர­ஸதுல் பலாஹ் என்ற பெயரை மாற்றி “ஜாமி­அதுல் பலாஹ்” எனும் பெயரில் உயர்­ க­லா­பீ­ட­மாக மாற்­றப்­பட்­டது.

இங்கு வெளி­யே­றிய மௌல­விமார் வெளி­நாட்டு ஜாமி­ஆக்­களில் கல்வி பயில்­வ­தற்கு இந்த ஜாமிஆ என்ற மாற்றம் முக்­கி­ய­மாகத் தேவைப்­பட்­டது.

இன்றும் பல்­நாட்டுப் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் ஜாமி­அதுல் பலாஹ் மாண­வர்கள்  உயர்­கல்வி பெற்று வெளி­யே­றி­யுள்­ளனர். அது மாத்­தி­ர­மன்றி இங்கு பட்­டம்­பெற்று வெளி­யே­றிய ஹாபிழ்கள் முஸ்லிம் நாடு­களில் நடை­பெற்ற அல்­குர்ஆன் போட்­டி­களில் பங்­கு­பற்றி பரி­சில்­களை சுவீ­க­ரித்­துள்­ளனர்.

கல்விச் செயற்­பா­டுகள்!
ஜாமி­அதுல் பலாஹ்வில் தனி அரபை மாத்­திரம் பயிற்­று­விக்­காது அல் ஆலிம் பரீட்­சைக்­கு­ரிய பாடங்­களும் தமிழ், கணிதம், சமூகக் கல்வி, ஆங்­கிலம், உருது போன்ற மொழி­களும் பாடங்­களும் பயிற்­று­விக்­கப்­பட்­டது.

தற்­போது கல்வி விரி­வாக்­கலை மைய­மாகக் கொண்டு அர­சாங்க பாடத் திட்­டத்­தோடு இணைந்து தரம் 8 ஆம் ஆண்டு முதல் க.பொ.த. சாதா­ரணம், க.பொ.த. உயர்­தரம் வரை வகுப்­புகள் நடத்­தப்­ப­டு­கின்­றன.

மேல­தி­க­மாக கணனி செயற்­பாட்டு கருத்­த­ரங்­குகள், பயிற்­று­விப்­பு­களும் முறை­யாக நடை­பெ­று­கின்­றன.

ஒரு வரு­டத்தில் அரை­யாண்டுப் பரீட்சை வருட இறுதிப் பரீட்­சைகள் நடை­பெறும். கல்விக் காலம் முடி­யும்­போது மௌலவிப் பரீட்சைத் தகு­திகாண் உல­மாக்கள் மூலம் நடத்­தப்­ப­டு­கின்­றது.

விசேட விரி­வு­ரை­யா­ளர்கள்
அதிபர் மௌலானா மௌலவி எம்.ஏ. முஹம்மத்  அப்­துல்லாஹ் ஆலிம் (ரஹ்­மானி) அவர்­க­ளுடன் வெளி­நாட்டு இஸ்­லா­மிய பட்­ட­தா­ரி­களும் பங்­கேற்­றனர்.

எகிப்து நாட்டைச் சேர்ந்த அல்­லாமா மௌலானா அஹ்மத் அப்துல் ஹமித், பாகிஸ்­தானைச் சேர்ந்த அல்­லாமா மௌலானா மக்சூத் அஹ்மத், மௌலானா நூர் இலாஹி போன்­ற­வர்­க­ளுடன் உப அதி­ப­ராக மௌலவி எஸ்.எம். அலியார் (பலாஹி) யுடன் விரி­வு­ரை­யா­ளர்­க­ளாக  மௌலவி பீ.எம்.எம். ஹனீபா (பலாஹி), மௌலவி ஏ.ஜீ.எம். அமீன் (பலாஹி), மௌலவி எம்.எச்.எம். புஹாரி (பலாஹி), மௌலவி எம்.வை. ஸைனுதீன் (பலாஹி மதனி), மௌலவி எம்.எம். அப்துர் ரஹீம் (பலாஹி), மௌலவி ஏ.ஆர். நிஸார் (பலாஹி), மௌலவி எம்.எம். கலா­முல்லாஹ் (றஷாதி), மௌலவி எம்.ஐ. அப்துல் கபூர் (பலாஹி மதனி), மௌலவி ஏ.எம். அலியார் (பலாஹி றியாழி) ஆகி­யோ­ருடன் ஹிப்ழ் பிரி­வுக்­காக மௌலவி ஹாபிழ் ஏ.எஸ்.எம். ஜின்னாஹ் (பலாஹி), மெள­லவி ஹாபிழ் என்.எம். அப்துல் அஹத் (ஷர்கி) ஹாபிழ் எஸ்.எம். கலந்தர் லெப்பை போன்­ற­வர்­களும் புதிய பல முகங்­களும் தொண்­டாற்­றி­னார்கள்.

ஜாமி­அதுல் பலாஹ்வின் உயர்­ப­டி­யான முன்­னேற்­றத்­திற்குக் காரணமாக அன்றும் இன்றும் சிரமம் பார்க்­காது உழைத்த நிரு­வாக சபை­யி­னரைப் பாராட்­டாமல் இருக்க முடி­யாது.

இக்­கல்­லூ­ரிக்­காக உதவி செய்த உள்ளூர், வெளியூர் மக்­க­ளையும் காத்­தான்­குடி கல்வி உலகம் மறக்­க­மாட்­டாது என்­பது உண்மை.

‘ஷைகுல் பலாஹ்”வின் வாழ்­வியல்
காத்­தான்­குடி ஜாமி­அதுல் பலாஹ் அதிபர் மௌலானா மௌலவி ‘ஷைகுல் பலாஹ்” எம்.ஏ. அப்­துல்லாஹ் ரஹ்­மானி அவர்கள் தென்­னிந்­தியா, தஞ்சை மாவட்டம் அதிராம் பட்­டி­னத்தில் 21.03.1932 இல் பிறந்­தார்கள்.

இவர்­களின் தந்தை அல்­லாமா அல்ஹாஜ் முகம்­மது அபூ­பக்கர் ஆலிம் ஆவார்கள்.

இப்­பெ­ரியார் 1950 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு வரை மஹ­ர­கம மத்­ர­ஸதுல் கபூ­ரிய்யா அரபுக் கல்­லூ­ரியில் விரி­வு­ரை­யா­ள­ராகக் கட­மை­யாற்­றி­யுள்­ளார்கள்.

1955 ஆம் ஆண்டு முதல் 1965  ஆம் ஆண்டு வரை அட்­டா­ளைச்­சேனை ஷர்க்­கியா அரபுக் கல்­லூ­ரியில் அதி­ப­ராகக் கட­மை­யாற்றி பின்னர் இந்­தி­யாவில் கீழ்க்­கரை, காயல்­பட்­டினம் போன்ற இடங்­களில் கல்விப் பணி­யாற்­றி­னார்கள். இவர்கள்  உலமாக் குடும்­ப­மாகும்.

தந்தை வழியே தனயன்
தந்தை அபூ­பக்கர் ஆலிம் ஷாஹிப் போன்று தன­ய­னான மௌலானா மௌலவி அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்­களும் ஆலி­மாக வெளி­வ­ரு­வ­தற்­காக சொந்த ஊர் அதிராம்பட்­டி­னத்தில் மத்­ர­ஸதுல் ரஹ்­மா­னிய்யா அரபுக் கல்­லூ­ரியில் சேர்ந்­தார்கள்.

தந்தை அபூ­பக்கர் ஆலிம் அவர்­களின் ஆசி­யோடும் அன்புத் தாயார் நபீஸா உம்மா ஆகி­யோரின் துஆ­வோடும் பாட­சாலை வாழ்க்­கையைத் தொடர்ந்­தார்கள்.

கல்­வி­மான்­க­ளான அல்­லாமா அஸ்­ஸெய்­யிது அலவி தங்கள் அஷ்­ஷைகு அஹ்­மது கபீர், அல்­லாமா முகம்­மது முஸ்­தபா (பாகவீ), மௌலானா மௌலவி எம்.எஸ்.எம். நெய்னா முஹம்­மது ஆலிம் போன்ற மேதை­க­ளிடம் கால்­ம­டித்து கல்வி பயின்­றார்கள். 01.04.1954 ஆம் ஆண்டு ரஹ்­மானி பட்­டத்­துடன் மத்­ரஸா வாழ்க்­கையை முடித்து வெளி­யே­றி­னார்கள்.

ஆரம்ப ஆசி­ரியர் பணி
ஆரம்ப ஆசி­ரியர் பணியை அதிராம்பட்­டினம் அல் மத்­ர­ஸதுல் ஸலா­ஹிய்­யாவில் அதி­ப­ராகப் பதவி ஏற்று நான்கு ஆண்­டுகள் நல­மாக நடத்­தி­னார்கள். அதன் பின்னர் தனது தந்­தை­யுடன் அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் 03.05.1958 ஆம் ஆண்டு இலங்­கைக்கு வந்து அட்­டா­ளைச்­சேனை அரபுக் கல்­லூ­ரியில் விரி­வு­ரை­யா­ள­ராகக் கட­மை­யாற்­றினார்.

பின்னர் காத்­தான்­குடி மத்­ர­ஸதுல் பலாஹ் அரபுக் கல்­லூ­ரிக்கு தகுந்த விரி­வு­ரை­யாளர் தேவைப்­பட்­டதால் 13.10.1959 ஆம் ஆண்டு உப அதி­ப­ராக காத்­தான்­குடி மத்­ர­ஸதுல் பலாஹ்வில் கட­மையைத் தொடர்ந்­தார்கள். இவர்­களின் வரு­கையால் இக்­க­லை­யகம் அறி­வியல் ஒளி­பெற்றுத் திகழ்ந்­தது.

இல்­லறம்
அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் அதிராம்பட்­டினம் செ.மு.க. நூறு முஹம்­மது மரைக்­காயர் அவர்­களின் புதல்வி உம்முல் பஜ்­ரி­யா­ அ­வர்­களை 02. 09. 1961 ஆம் ஆண்டு மண­மு­டித்­தார்கள்.

இந்த இனிய வாழ்வில் மூன்று ஆண் குழந்­தை­களைப் பெற்­றெ­டுத்­தார்கள். முறையே மூத்த புதல்வர் முஹம்­மது  ரஹ்­ம­துல்லாஹ். அடுத்­தவர் முஹம்­மது முஸ்­தபா, மூன்றாம் மகன் முஹம்­மது பறக்­கத்­துல்லாஹ் ஆவார்கள்.

நீண்ட நாட்­களின் பின்­னர்தான் தனது மனைவி, பிள்­ளை­களை அப்­துல்லாஹ் ஹஸ்ரத் பார்க்கச் செல்­வார்கள்.

தொலை­பேசி வச­திகள் சீர் இல்­லாத காலத்தில் கடிதத் தொடர்­புடன் மாத்­திரம் தனது உற்றார் உற­வி­ன­ருடன் தொடர்பு வைத்து தனது வாழ்­நாளை ஜாமி­அதுல் பலாஹ்வின் சேவைக்­காக அர்ப்­ப­ணித்த அற்­புத மனி­தரின் இல்­லற வாழ்வின் பிந்­திய பக்கம் தனது அன்­புக்­கு­ரிய மனைவி பஜ்­ரிய்யா அவர்கள் இறை­யடி சேர்ந்­தார்கள்.

சோராத மனத்­திறன்
முஃமீன்கள் சோதிக்­கப்­ப­டு­வார்கள் என்­ப­தற்­கி­ணங்க சங்­கைக்­கு­ரிய உஸ்­தாத்னா ஷைகுல் பலாஹ் அல்­லாஹ்வின் சோத­னைக்­குள்­ளா­கிய போதும் சோர்ந்து போகாமல் தனது பிள்­ளை­களைக் கல்­வி­மான்­க­ளாக மாற்றும் முயற்­சி­யில் ஈடு­பட்­டார்கள்.

தனது மூத்த புதல்வர் முஹம்­மது ரஹ்­ம­துல்­லாஹ்­வையும் இளைய புதல்வர் பறக்­கத்­துல்­லாஹ்­வையும் காத்­தான்­குடி ஜாமி­அதுல் பலாஹ்வில் கல்வி பயில வழி செய்­தார்கள். அதன் சிறப்­பாக 1991 ஆம் ஆண்டு ரஹ்­ம­துல்லாஹ் மௌலவி பட்டம் பெற்று பின்னர் வாழைச்­சேனை ‘குல்­லி­யதுன் நஹ்­ஜதில் இஸ்­லா­மிய்யா’ அர­புக் ­கல்­லூ­ரியில் அதி­ப­ராகக் கட­மை­யாற்­று­கின்றார். இவர் பன்­னூ­லா­சி­ரி­ய­ராகத் திகழ்­கின்றார்.

உஸ்­தாத்­னாவின் இரண்­டா­வது மகன் முஸ்­தபா. நீண்ட கால­மாக நோய்­வாய்ப்­பட்­டி­ருந்து அண்­மையில் தாருல் பகாவை அடைந்து விட்டார். மூன்­றா­வது மகன் முஹம்­மது பறக்­கத்­துல்லாஹ்.

கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் இயங்கும் ‘ஜாமிஆ மதீ­னத்துல் இல்ம்” கல்­லூ­ரியில் அல்­ஹாபிழ் பட்டம் பெற்று காத்­தான்­குடி ஜாமி­அதுல் பலாஹ்வில் மௌலவி பட்டப் படிப்பைத் தொடர்ந்து இதே கல்­லூ­ரியில் போதனாசி­ரி­ய­ராகக் கட­மை­யாற்­று­கின்றார்.

உஸ்­தா­துனா அவர்­க­ளுக்கு ஏற்­பட்ட சோதனை என்­பது 55 வருட கால­மாக பெற்ற தாயை பிறந்த பொன்­னாட்டை உற்­றாரை, உற­வி­னரை, சுற்­றத்­தாரைப் பிரிந்து கடல் கடந்து வந்து கல்விப் பணி­யாற்­றிய அன்னார் சொந்த ஊரில் தங்­கிய காலம் கொஞ்­சம்தான். அப்­படி இருந்தும் அன்பு மனை­வி­யாரும் மர­ணித்து இறை­யடி சென்­று­விட்­டார்கள். வாழ்வே சோத­னை­யா­னது.

ஹஸ்­ரத்தின் கல்­வி­யூற்று
அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்­க­ளிடம் காணப்­பட்ட கல்­வியின் ஊற்று பரம்­பரை அறி­வி­யலின் தாக்­க­மாகும். இந்­திய நாட்டின் மலை­யாளப் பிர­தேசம் கொச்­சிப்­பட்­ட­ணத்தை தாய­க­மாகக் கொண்ட அஷ்­ஷைகு கோஜா அலவி அவர்­களின் பரம்­ப­ரையைச் சேர்ந்­த­வர்கள். இவர்­களே ஒரு பெரிய கல்வி மகா­னாகும்.

அது மாத்­தி­ர­மின்றி இந்­தியா தஞ்சை மாவட்டம் அதிராம் பட்­டி­னத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் அறி­வுப்­பட்­ட­ணத்­தி­லேயே பிறந்­தார்கள். இங்கு அறி­ஞர்­களை மிகவும் மதிப்­பார்கள்.

அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்­களின் பாட்­டனார் அல்­லாமா ஷேகு அப்துல் காதிர் சூபி அவர்­க­ளா­வார்கள். இவர்கள் ஆக்­கிய நூல்கள் தான் முஹிம்­மாதுல் முத்­அல்­லிமீன், அஹ்­ஸனுல் மவாஇழ், மஜ்­மூஉல் கவாயித் தோன்­ற­வை­யாகும்.

இந்த அற்­புத நூலா­சி­ரி­யரின் பேரன்தான் அப்­துல்லாஹ் ஹஸ்ரத் என்றால் அவர்­களின் அறிவின் கரு­வூ­லத்தைக் கேட்­கவும் வேண்­டுமா?

இத்­த­கைய மதிப்­புள்ள ஊரின் மகான் அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள், இலங்கை மண்ணில் ஆற்­றிய பணி­களைச் சமு­தாயம் மறந்­து­விட முடி­யாது.

பன்­முகத் தன்மை!
எதையும் சமு­தா­யத்­துக்­காகச் சிந்­திக்­கின்ற தன்மை மௌலானா மௌலவி அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்­க­ளிடம் காணப்­பட்­டது. தனக்­கென இல்­லாமல் பிற­ருக்­காக யோசிக்­கின்ற மனப்­பான்மை அவர்­களின் பரம்­பரை வழி­யாகும்.

இதனை சற்றுப் பார்ப்­போ­மானால் இலங்கைத் தலை­நகர் கொழும்பு 2 ஆம் குறுக்குத் தெரு சம்­மாங்­கோட்டார் ‘ஜாமிஉல் அழ்பர்’ பள்­ளி­வா­யலைக்  கட்­டு­வ­தற்கு நிலம்­கொ­டுத்து அதனை அழ­காகக் கட்டி முடித்­த­வர்கள் அப்­துல்லாஹ் ஹஸ்­ரத்தின் பாட்­டனார் அப்துல் காதிர் ஆலிம் ஸாஹிப் அவர்­க­ளையே சாரும்.

இந்தப் பரம்­ப­ரை­யினர் இன்­று­வரை இப்­பள்­ளியை நிரு­வ­கிப்­பதும் அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்­களும் இப்­பள்­ளியில் பிர­தான நிரு­வா­கி­யாக இருப்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

ஆத்­மீக வாழ்க்கை!
மௌலானா மௌலவி அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் ஒரு அறி­வாளி மட்­டு­மல்ல  ‘ஆபித்’ வணக்­க­வா­ளியும் ஆவார்கள்.

12.12.1969 ஆம் ஆண்டு அன்புத் தாயுடன் ஹஜ்ஜுக் கட­மையை நிறை­வேற்­றிய அன்னார் பல ஹஜ்­ஜுக­ளையும் உம்­றாக்­க­ளையும் நிறைவு செய்­த­துடன் தஹஜ்ஜுத், வித்ர், லுஹா, அவ்­வாபீன் போன்ற தொழு­கை­க­ளையும் தவ­றாது தொழக்­கூ­டிய சிறந்த ஆபி­தா­வார்கள். அவர்­களின் அமல் அவர்­களின் அக­மா­கி­யது. இதுவே அவர்­களின் முகப் பிர­கா­ச­மா­கி­யது.

ஹஸ்­ரத்தின் கடைசி அவா!
ஜாமி­யதுல் பலா­ஹுக்­காக இயக்­குனர் சபையில் உழைத்த முஹம்­மது காசிம் ஹாஜியார் அஷ்­ஷஹீத் அஹ்மத் லெப்பை ஜே.பி. , அப்துல் கபூர் ஆலிம் ஹாஜியார்,  எம்.ஐ.ஏ. முகைதீன் ஜே.பி. ,ஆதம் லெப்பை ஹாஜியார், இப்­றாஹீம் ஹாஜியார், இஸ்­மாயில் ஹாஜியார், முஸ்­தபா ஜே.பி. (காழியார்), எம்.பி. மஜீத் ஹாஜியார் ஜே.பி., அசனார் ஹாஜியார், அல்ஹாஜ் மௌலவி ஜுனைத் (பலாஹி), மௌலவி எஸ்.எம். அலியார் (பலாஹி) , மௌலவி எம்.எச்.எம். புஹாரி பலாஹி, அல்ஹாஜ் கே.எம்.ஏ.எம். சலீம் பீகொம், மௌலவி ஏ.எல்.எச். பது­றுத்தீன் பலாஹி, மௌலவி ஏ.எம். அலியார் (றியாழி),எம்.எஸ். அப்துல் அஸீஸ், கே.எம்.எம். கலீல், அல்ஹாஜ் எம். சம்சுத்தீன், ஈ,எல். முஸ்தபா, ஏ.எல். அப்துல் ஜவாத் பீ.ஏ. (சட்டத்தரணி), எம்.எல்.ஏ. முகைதீன், எம்.எஸ்.எம். அமீர், மௌலவி எம்.ஐ.எம். முபாறக் (பலாஹி),  ஏ.எல். பதுறுத்தீன், என்.எம். எம். முபாறக், எம்.ஐ.எம். முனீர் ஆகியோருடன் இன்றைய ஜாமிஆ தலைவர் மௌலவி ஏ.எம். அலியார் (றியாழி), எஸ்.எல். அலியார் பலாஹி (காதி நீதிபதி), எம்.ஐ.எம். முகைதீன் ஹாஜியார் போன்ற உதவித் தலைவர்களுக்கும்  நன்றி கூறி, துஆ செய்வதுடன் 2015 வரை ஜாமிஆவில் இருந்து வெ ளியேறிய 404 உலமாக்களுக்கும் 377 ஹாபிழ்களுக்கும் துஆ செய்து, ஸலாம் கூறி, ஞாபகம் வருவதும் போவதுமான நிலையில் காத்தான்குடி ஜாமிஆ அறையில் தொழுத வண்ணமும் ஓதிய வண்ணமும் துஆ செய்த வண்ணமும் அமல்களில் ஈடுபட்ட வண்ணமிருக்கிறார்கள்.

முழு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உதாரண புருஷரான அப்துல்லாஹ் ஹஸ்ரத்தின் சேவையை அல்லாஹுத்தஆலா கபூல் செய்வானாக! ஆமீன் யாறப்பல் ஆலமீன்!!

மௌலவி காத்­தான்­குடி பௌஸ்
அதிபர், அல்­பலாஹ் குர்ஆன் மத்­ரஸா பாணந்துறை

நன்றி : அதிரைநியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.