பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் குளத்தில் பேருந்து கவிழ்ந்து 
விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பீகார் மாநிலம், சித்தமார்கியில் இருந்து மதுபானி செல்லும் வழியில் 
பேருந்து சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 25 அடி 
குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் 55 பயணிகள் 
இருந்ததாக கூறப்படுகிறது. இதில் 35 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும், பேருந்து அதிக நேரம் தண்ணீரில் மூழ்கி இருப்பதால் அதில் பயணம்
 செய்த அனைவரும் பலியாக வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
இது குறித்து தகவல் தெரிவித்தும் மாவட்ட நிர்வாகம் மீட்பு பணிகளில் தாமதம் 
காட்டியது. பேருந்தை மீட்க்கும் பணியில் உள்ளூர் பொதுமக்கள் உடனடியாக 
ஈடுபட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.


No comments:
Post a Comment