சரிந்து வரும் அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள யாரையாவது எதிரியாகச் சித்தரித்து, அவர்களை எதிர்ப்பதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவது ராமதாஸின் அன்றாட வாடிக்கை. தமிழ்நாடு முழுவதும் வன்னியர் இனத்தைச் சேர்ந்த சகோதரர்களும் - பார்க்கவகுலத்தைச் சேர்ந்தவர்களும் அண்ணன் தம்பிகளாக பழகி வருகிறார்கள்.அவர்களிடத்தில் விரோதத்தை வளர்த்து அமைதியை கெடுக்க பார்க்கிறார் ராமதாஸ். சமூக நீதிக்காக போராடுகிறேன் என கூறும் ராமதாஸ் அவர்கள், பிற்படுத்தப்பட்ட ஒரு சமுதாயத்தின் தலைவரான என்னை தனிபட்ட முறையில் கொச்சைப்படுத்தி அறிக்கைகள் விடுவதும் பேட்டி கொடுப்பதும் எந்த விதத்தில் நியாயம்..? சி.பி.ஐ. விசாராணை வேண்டும்" என்கிறார் ராமதாஸ். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.மேலும் காவல்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவும் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்நோக்கத்தோடு தவறான அறிக்கைகளை விடுவது வழக்கை திசை திருப்பும் முயற்சியல்லவா? கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, திண்டிவனத்தில் சாதாரண டாக்டராக தொழில் செய்து வந்த ராமதாஸ், இன்று பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாகவும் - பல்வேறு அறக்கட்டளைகளை நிர்வகிப்பவராகவும் இருப்பது எப்படி என்பதை கூறமுடியுமா? ஆயிரக்கணக்கான அப்பாவி வன்னியர்களின் கூட்டு முயற்சியால் கட்டப்பட்ட கல்லூரியை தன் குடும்ப சொத்தாக மாற்றிக்கொண்ட டாக்டர் ராமதாஸ் அவர்கள், 45 ஆண்டுகாலமாக சிறு பள்ளியில் துவங்கி படிப்படியாக முன்னேறி உலக தரம் வாய்ந்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தை உருவாக்கிய என்னை பார்த்து குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது. டாக்டர் ராமதாஸ் மகன் அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக 5 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். அப்போது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ஒரு கல்லூரிக்கு இரண்டு இடங்கள் என்கிற வகையில் பெற்றுக் கொண்டு, அந்த 5 ஆண்டுகளில் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியாதா? மேலும், அகில இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியை விசாரிக்க வேண்டும் என்கிறார் ராமதாஸ். இதே மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையை நிராகரித்து விட்டுத்தானே அவரின் மகன் அன்புமணி இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதியை வழங்கி பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக சி.பி.ஐ-யால் குற்றம் சாட்டப்பட்டு இன்றும் குற்றவாளியாக கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் இணையாக செய்தித்தாள்களில் கோடி கோடியாக பணம் செலவழித்து, பாமக சார்பில் விளம்பரம் செய்யப்பட்டதே அதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்பதை தெரிவிக்க முடியுமா? தன்னுடைய கட்சி மாநாட்டிற்கும், தேர்தலுக்கும் தன் வீட்டு சுபகாரியங்களுக்கும் - ஏன், தன்னுடைய கல்லூரியில் சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் எத்தனை முறை தன் கட்சிக்கார்கள் மூலம் என்னிடம் கைநீட்டினார் என்பது நினைவில் இல்லையா? அவ்வாறு கொடுப்பதில் தடை ஏற்பட்டதால் கோபத்தில் என் மீது நஞ்சை கக்குவது நியாயமா? எதிரியின் மீது குற்றம்சாட்டி தன் சுட்டுவிரலை நீட்டும்போது, மற்ற மூன்று விரல்களும்தன் மார்பை நோக்கித் திரும்புவதை அவர் உணரவேண்டும். யாரோ சில வழிப்போக்கர்கள்பாடும் வஞ்சக பாட்டிற்கு பின்பாட்டு பாட வேண்டாம் என ராமதாஸை கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு பாரிவேந்தர் கூறியுள்ளார்.
kmmalik2009@gmail.com
காவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி
அதிரை இணையங்கள்
Labels
SMS சேவைகளைப் பெற..
TIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் !
தமிழ் நாளேடுகள்
சமுதாய அமைப்புத் தளங்கள்
இஸ்லாமிய இணைய தளங்கள்
Links
Tiyawest Chat Box
Subscribe to:
Post Comments (Atom)
உம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்
Follow us on facebook
ஜெயகாந்தன் நினைவுகள்
Popular Posts
-
தனி அமைப்பு ஒன்றைத் தொடங்கி அதன்மூலம் திமுகவுக்கு பாடம் சொல்லித்தருவோம். அடுத்த ஒரி...
-
மது விலக்கு கோரியும், மார்த்தாண்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும், செல்பேன் டவர் மீது ஏறி போராடிய போது, உயிரிழந்த சசி பெருமாள் க...
-
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி தேர்தலுக்கான புதிய டிஜிபியாக கே.பி.மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக ...
-
TIYA வின் 2 ம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சியில் நமது மஹல்லாவாசிகள் அனைவர்களும் தவறாது கலந்து கொண்டு சிறபித்து தருமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம...
-
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலை கழகங்களில் M.Sc. M.Phil படிக்க நுழைவு தேர்வு வரும் 05.06.2011 அன்று நடத்தப்படுகின்றது (இன்ஷா அல்லாஹ் ) அதற்க்...
-
அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ புயல் தீவிரமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே மையம் கொண்டுள்ள ‘கஜா’ ...
-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் 24/01/2015 சனி அன்று மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின் துபை கிளை சார்பாக நடத்தப்பட்...
Blog Archive
- October (1)
- January (7)
- November (8)
- October (2)
- September (1)
- August (10)
- July (13)
- June (88)
- May (54)
- April (22)
- March (61)
- February (102)
- January (51)
- December (205)
- November (310)
- October (297)
- September (271)
- August (257)
- July (223)
- May (30)
- April (158)
- March (208)
- February (173)
- January (247)
- December (209)
- November (232)
- October (19)
- September (113)
- August (143)
- July (118)
- June (56)
- May (39)
- April (178)
- March (221)
- February (112)
- January (3)
- November (31)
- October (101)
- September (6)
- July (64)
- June (71)
- May (121)
- April (73)
- March (116)
- February (85)
- January (138)
- December (140)
- November (107)
- October (56)
- September (1)
- August (71)
- July (124)
- June (102)
- May (105)
- April (94)
- March (126)
- February (86)
- January (83)
- December (164)
- November (102)
- October (171)
- September (174)
- August (205)
- July (201)
- June (94)
- May (87)
- April (173)
- March (119)
- February (142)
- January (169)
- December (215)
- November (182)
- October (41)
- September (109)
- August (150)
- July (112)
- June (122)
- May (88)
- April (108)
- March (106)
- February (120)
- January (177)
- December (212)
- November (183)
- October (151)
- September (51)
- August (1)
- July (47)
- June (73)
- May (89)
- April (86)
- March (92)
- February (54)
- January (58)
- December (75)
- November (78)
- October (18)
- September (27)
- August (57)
- July (67)
- June (79)
- May (85)
- April (29)
- March (49)
- February (47)
- January (40)
- December (44)
- November (50)
- October (59)
- September (70)
- August (74)
- July (62)
- June (62)
- May (11)
- April (36)
- March (49)
- February (37)
- January (69)
- December (95)
- November (57)
- October (40)
- September (45)
- August (50)
- July (64)
- June (40)
- May (45)
- April (37)
- March (58)
- February (16)
- January (12)
- December (32)
- November (66)
- October (66)
- September (45)
- August (16)
தன்ஸில் குரான்
குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு
வேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
adiraitiyajobs@gmail.com
No comments:
Post a Comment