Latest News

பிரேசிலில் 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து இதயத்தை வெளியே எடுத்த கொடூரன் கைது


ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு, அந்த சிறுமியின் இதயத்தை பிடுங்கி எடுத்த கொடூரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பிரேசிலில் மினாயிஸ் ஜெராய்ஸ் மாகாணத்தை சேர்ந்த சிறுமி ரெயானா அபரேசிதா காண்டிடா. 10, பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு வந்த ஜெய்ரோ லோப்ஸ்,42 என்ற நபர், சிறுமி ரெய்னாவை பின் தொடர்ந்து சென்று கடத்தி சென்றான். பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்றுவிட்டு, அவளது இதயத்தை வெட்டி எடுத்துவிட்டு, அவனது வீட்டின் பின்புறம் சிறுமியின் உடலை புதைத்துவிட்டான். சிறுமியைக் காணாத பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், லோப்ஸை கைது செய்து விசாரித்ததில், நடந்த உண்மையை ஒப்புக் கொண்டான். இதையடுத்து, சிறுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தபோது, உடலில் இதயம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் 500 பேர் ஆவேசத்துடன் திரண்டனர். கொடூர காமுகனை அடித்து கொல்ல வேண்டும் என வலியுறுத்தினர். எனவே, கைது செய்யப்பட்ட ஜெய்ரோ லோப்ஸ் ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டான்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.