Latest News

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: டைம்ஸ் ஆப் இந்தியா, தினமலர் மீது ஜெ. அவதூறு வழக்கு


செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு தொடர்பாக கட்டுரைகளை வெளியிட்டதற்காக டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் தினமலர் நாளேடுகள் மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளத்துக்கு காரணமே செம்பரம்பாக்கம் ஏரி நீரை முறையின்றி அதிக அளவு திறந்துவிட்டதுதான் காரணம் என்பது பொதுவான குற்றச்சாட்டு. இதே குற்றச்சாட்டை முன்வைத்து ஊடகங்களும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன.

கடந்த டிசம்பர் 12-ந் தேதி இது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் தினமலர் நாளேடுகள் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. இந்த கட்டுரைகளை வெளியிட்டதற்காக இந்த இரு நாளேடுகள் மீது முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை முதனன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் இந்த வழக்குகள் இன்று தொடரப்பட்டன. ஏற்கனவே ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் மற்றும் நக்கீரன் ஏடுகள் மீது அடுக்கடுக்கான அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.