Latest News

காங்கிரசுக்கு கற்பித்தது போல் பா.ஜ.க. அரசுக்கும் மக்கள் பாடம் கற்பிப்பார்கள்


கருப்பு பணத்தை மீட்போம் என வாக்குறுதி அளித்துவிட்டு அதை நிறைவேற்றாத பா.ஜ.க. அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என காந்தியவாதியான அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

தனது சொந்த ஊரான ரலேகான் சித்தியில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஹசாரே, ‘கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது நூறே நாட்களில் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை மீட்போம். அந்த பணத்தில் இருந்து ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது. இதுவரை வெறும் 15 ரூபாய் கூட யார் கணக்கிலும் போடப்படவில்லை.

தாங்கள் மோசம் செய்யப்பட்டதை தற்போது உணர்ந்துள்ள மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு கற்பித்தது போலவே, இந்த (பா.ஜ.க.) அரசுக்கும் பாடம் கற்பிப்பார்கள்.’ என்று தெரிவித்தார்.

டெல்லி தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் வெல்வாரா? கிரண் பேடி வெல்வாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்த விவகாரத்தில் நான் கருத்து கூற விரும்பவில்லை. வேறு எதைப் பற்றியாவது கேளுங்கள் என்றார். உங்களது அறிவுரையை மீறி அரசியலுக்குள் நுழைந்ததால் அவர்கள் மீது கோபமாக இருக்கிறீர்களா? என்றதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த அவர், இல்லையில்லை.., உங்களுக்கு ஏதாவது எதிர்பார்ப்பு இருந்து, அது நிறைவேறவில்லை என்றால் தான் யார் மீதாவது கோபம் வரும்.

என்னைப் பொருத்தவரை யாரிடமும் எதையும் எதிர்பார்த்தது கிடையாது. பிறகு எதற்கு யார் மீதும் நான் கோபப்பட வேண்டும்? என எதிர் கேள்வி கேட்கிறார், ஹசாரே.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.