Latest News

  

இன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 'கற்க கசடற' நேரலை நிகழ்ச்சியில் அதிரை மீரா

இன்று (28.01.2015) மாலை இந்திய நேரப்படி மாலை 5.30 மணிமுதல் 6 மணிவரை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ள 'கற்க கசடற' என்ற நிகழ்ச்சியில் 'அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி? (HOW TO SCORE MORE MARKS/) என்ற பொருளின் கீழ் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்கள் அதிரை மேலத்தெருவை சேர்ந்தவரும், சென்னை திருவல்லிக்கேணியில் செயல்படும் முஸ்லீம் உயர்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியருமான 'மீரா' என்கிற F.சாகுல் ஹமீது அவர்கள்.

இந்த நிகழ்ச்சி நாளை (29.01.2015) வியாழன் அன்று அதிகாலை 5.30 மணிமுதல் 6 மணிவரை மறுஒளிபரப்பு செய்யப்படும்.

'நல்லாசிரியர்' விருதை சென்ற மாதம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற விழாவில் KSR GROUP OF INSTITUTION மற்றும் TIMES OF INDIA இணைந்து வழங்கிய விழாவில் இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் (INSA) தலைவர் டாக்டர் ராகவேந்திரா கடாகர் அவர்களாலும், சென்னை மயிலாப்பூரில் இயங்கும் SRINIVASA YOUNGMEN ASSOCIATION என்ற அமைப்பினராலும் 'SYMA' என்ற விருதை மயிலாப்பூர் போலீஸ் துணை ஆணையர் மூலமும் பெற்று தனது கல்விப்பணிக்காக சிறப்படைந்துள்ளார்கள்.


ஒரு முஸ்லீமாக மார்க்கத்தை பின்பற்றியும், தோற்றத்தில் வெளிப்படுத்தும் நிலையிலும் பல சிறப்புக்களை பெற முடியும் என சக முஸ்லீம்களுக்கும் நல் உதாரணமாக திகழும் 'நல்லாசிரியர்' மீரா என்கிற சாகுல் ஹமீது அவர்கள் மென்மேலும் சிறப்புற ஏகன் அல்லாஹ் துணை நிற்பானாக!

K.M.N. முஹம்மது மாலிக்
தலைவர் / TIYA

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.