கனடாவில் உயிர்வாழ துடிக்கும் இரட்டை சிறுமிகளுக்கு கல்லீரலை தானமாக வழங்குமாறு பொதுமக்களுக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனடாவின் ஒன்றோரியாவை சேர்ந்த மைக்கேல் வாக்னர் என்பவர், வியட்நாமில் ஓர் அனாதை இல்லத்தில் இருந்து 3 வயது இரட்டையர்கள் Binh, Phuoc-வை தத்தெடுத்துள்ளார்.
இவர்கள் இருவரும் மரபணு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் இவர்களது கல்லீரல் செயலிழந்து போகும் அபாய நிலையில் உள்ளனர்.
உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிடில் இரு பெண்களும் இறந்து விடுவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது இரட்டை குழந்தைகளில் ஒருவருக்குத்தான், கல்லீரலை தானமாக வழங்க முடியும் என்ற நிலையில் இருப்பதால், எந்த முடிவையும் எடுக்க விரும்பவில்லை என மைக்கேல் வாக்னர் தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சைக்கான ஆயத்தங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் வாக்னர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
உதவ விரும்புபவர்கள் ரொறொன்ரோ பொது வைத்தியசாலையுடன் 416-340-4800 ext.6581 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
No comments:
Post a Comment