பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கையில் இஸ்லாமியர்களை புத்த மதத்தை சேர்ந்தவர்கள் தாக்குவது கண்டிக்கத்தக்கது.
லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே, தமிழினத்தை கூண்டோடு அழித்துவிட்டு சிங்களர்களையும் புத்த மத மக்களையும் கொண்டு இலங்கைக்கு புத்துணர்ச்சி ஊட்டிவிடலாம் என்ற எண்ணத்தோடு செயல்படுவது காட்டு மிராண்டித்தனமானது.
இது போன்ற பொது ஜன விரோத போக்கினை நடத்திவரும் ராஜபக்சேவுக்கு இந்திய பிரதமர் மோடி தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். இலங்கை அரசு இது போன்ற போக்கினை கைவிட்டு மக்களாட்சி நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்து.
No comments:
Post a Comment