ஈராக்கில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டம் அடைந்து வருகிறது. நாட்டின் 2-வது பெரிய நகரமான மொசூல் நகரத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் கடந்த 9-ந் தேதி பிடித்தனர். அதைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த நகரமான திக்ரித்தை கைப்பற்றினர். இந்த திக்ரித் நகரில் இந்திய நர்சுகள் 46 பேர் (இவர்கள் கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்) உள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. இதையடுத்து சர்வதேச செம்பிறை சங்கத்தினரின் உதவியை அங்குள்ள இந்திய தூதரகம் நாடியது.
அப்போது, இந்திய நர்சுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டது. அதன்படி சர்வதேச செம்பிறை சங்கத்தினர் திக்ரித் நகரில் உள்ள 46 இந்திய நர்சுகளையும் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களுக்கு உதவியும் செய்து வருகிறார்கள். நாங்கள் பத்திரமாக நாடு திரும்ப உதவுங்கள் என்று ஈராக்கில் சிக்கித்தவிக்கும் இந்திய நர்சுகள், பிரதமர் நரேந்திர மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் இங்கு வேலை செய்யுங்கள், உங்களுக்கு முழு சம்பளமும் அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். இதனையடுத்து இந்திய நர்சுகள் பணிபுரிய ஒத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. திக்ரித் நகரை கட்டுக்குள் கொண்டுவந்ததை அடுத்து போராளிகள் மிகவும் மரியாதையுடன் நடத்துகின்றனர் என்று நர்சுகள் தெரிவித்துள்ளனர். திக்ரித் நகரை போராளிகள் கட்டுக்குள் கொண்டுவந்ததை அடுத்து நர்சுக்கள் அவர்களது பிடியிலே உள்ளனர். இது தொடர்பாக இந்திய நர்ஸ் ஜென்சி ஜெம்ஸ் கூறுகையில் “நாங்கள் துப்பாக்கி சூடு சத்தம் எங்களுக்கு கேட்கிறது. ஆனால் வெளியே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. நர்சுக்கள் யாரும் வெளியே செல்லவேண்டாம் என்று போராளிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அடிப்படை தேவை வேண்டும் என்றாலும் நாங்கள் எங்களது பாதுகாப்பு பற்றி கவலை கொண்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில் நாங்கள் மருத்துவமனையில் பத்திரமாக உள்ளோம். குண்டுகள் வெடித்ததில் நெட்வொர்க் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களலால் எவ்வளவு நேரம் தொலைபேசியை பயன்படுத்த முடியும் என்பதுதெரியாது என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment