தலைவி
தலைவனுக்காக
தலைவன்
தலைவிக்காகக்
காத்திருப்பது
தலைப்புக்காகக்
கவிஞன்
காத்திருப்பது
குழந்தைகள்
அரவணைப்புக்கும்
அன்புக்கும்
காத்திருப்பது
பயிர்கள்
பாயும் நீருக்காகக்
காத்திருப்பது
உணர்வுகள்
உணரப்படுவதற்காகக்
காத்திருப்பது
இருள்
வெளிச்சத்திற்காகக்
காத்திருப்பது
அறிவு
ஊட்டப்படுவதற்காகக்
காத்திருப்பது
விவசாயி
அறுவடைக்காகக்
காத்திருப்பது
பிரசவத்தில் தாய்
பிள்ளையைக் காணக்
காத்திருப்பது
தனது ஆக்கம்
பிரசுரம் ஆகும்
நாளுக்காக
எழுத்தாளன்
காத்திருப்பது
தேர்வெழுதிய மாணாக்கர்
மதிப்பெண்ணைக் காணக்
காத்திருப்பது
உழைப்பவர் யாவரும்
உரிமையாம் கூலிக்குக்
காத்திருப்பது
இந்தக்
காத்திருத்தல் எல்லாம்
என்று நிறைவேறும்
என்றே
காலமும்
காத்திருக்கும்
ஏக்கத்துடனே...
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
நன்றி : சமுக விழிப்புணர்வு பக்கங்கள்



No comments:
Post a Comment