[ 3 ] தொழில் புரிவோம் வாருங்கள் !
சென்றவாரம் ஒரு பொருள் சந்தைக்கு வரும் முன் எத்தனை தொழிற்சாலை தொழிலாளர்கள் காலம் ஆகியவைகளை தாண்டி வருகிறது என்பதை விளக்குவதாக சொல்லி இருந்தேன்.
உதாரணமாக ஆண்கள் அணியும் டி சர்ட் கடையை அலங்கரிக்க விவசாயிகளின் உழைப்போடு துவங்குகிறது.
1. பருத்தி செடியில் காய்க்கும் பருத்திதான் முதல் மூலப்பொருள்
2. பஞ்சாலைக்கு அனுப்பப்பட்டு பருத்திக்காயும் பஞ்சும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு பஞ்சு சுத்தமாக்கப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது.
3. நூற்ப்பாலை தரம் பிரிக்கப்பட்ட பஞ்சு நூற்பாலையில் பல தரங்களாக நூற்கப்பட்ட நூலாக வெளிவருகிறது.
4. நூலானது லுங்கி போன்ற தயாரிப்புகளுக்கு கஞ்சி போடக்கூடிய சைசிங் மில்களுக்கும் டி-சர்ட் தயாரிப்புகளுக்கு நிட்டிங் எனப்படும் நுல் அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படும் நுல் துணியாக உருவெடுத்துவிட்டபின்
5. சாயப்பட்டறை [ Dyeing Factory ] க்கு அனுப்பப்பட்டு தேவயான கலர் ஏற்றப்படும்
6. காம்பக்டிங் அல்லது ஸ்டீம் காலண்டரிங் செய்யும் இடம் [ அதாவது துனியை அயர்ன் செய்வதுபோல் செய்து மடித்து தரும் ஓர் அங்கம் ] வந்து சேர்ந்து அதன் பின் தேவைப்பட்டால் பிரிண்டிங் செய்யுமிடம் வரும்
7. பிரிண்டிங் தேவை இல்லை எனும் பச்சத்தில் கட்டிங் செக்ஷன் வந்து ஆடையின் வடிவத்திற்க்கேற்ப்ப Patton வெட்டப்பட்டு தையல் செக்ஷனுக்கு வந்து சேரும்
8. எம்பிராயட், லேபிள் போன்ற தேவைகளும் முடிக்கப்பட்டு
9. பேக்கிங் செக்க்ஷசன் வந்து பேக்கிங் செய்யப்பட்டு கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆக பல நாட்களை செலவிட்டு பல தொழிலாளர்களை வேலை செய்ய வைத்து பல தொழிற்ச்சாலைகளை கடந்துதான் ஒரு பனியன் உருவாகிறது அத்தனை விஷயங்களையும் தெரிந்து வைத்துதான் ஒரு முதலாளி இருக்கவேண்டும்.
ஒரு நிறுவனத்தை நடத்தும் பொழுது நல்ல மேலாளர் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்க்கு என்ன தகுதிகள் தேவையாக இருக்கும் என்பதை நல்லி குப்புசாமி செட்டியார் தனது நூலில் அழகாக விவரிப்பார் அதாவது தேர்ந்தெடுக்கப்படக்கூடிய ஒரு மேலாளர் என்பவர் கடின உழைப்பாளி, கை சுத்தமானவர், பணிவுமிக்கவர் என்ற பண்புகள் இருப்பது என்பதை கருத்தில் கொண்டால் சரியல்ல இந்த குணங்கள் சாதாரன மனிதர்களுக்கு இருக்கக்கூடிய நற்பன்புகளாகும் மேலாளர் என்பவர் நல்ல ஆளுமை திறமை மிக்கவராக இருக்க வேண்டும் அதோடு கடின உழைப்பு, நேர்மை ஆகியன சேர்ந்திருந்தால் நல்ல தேர்வாகும் என கூறுவார் மேலும் கூடுதல் பலம் சமயேஜித முடிவுகளை உடனடியாக எடுக்க தெரிந்தவராக இருந்தால் முதலாளிக்கு பயனுள்ளவராக ஆகிவிடுவார்.
உதாரணமாக நம் நிறுவனத்தில் இருந்து சாமான்களை ஏறிக்கொண்டு வேறு ஒரு இடத்திற்கு நமது வேன் செல்கிறபோது வழியில் நமது வேன் எதிரே சென்ற பைக்கில் மோதிவிட்டன பைக்கிற்கு சிரிய சேதாரம் பைக் ஓட்டியவருக்கும் காயம் ஏற்பட்டு விட்டது வேன் ஓட்டுனர் மேலாளரான நமக்கு போன் செய்து விவரிக்கின்றார் [முதலாளி ஊரில் இல்லை] நாம் என்ன செய்யவேண்டும் ?
உடனடியாக சம்பவம் நிகழ்ந்த இடத்திற்க்கு நாம் செல்லவேண்டும் முன் எச்சரிக்கையாக ஆக்டிங் டிரைவரை கூடவே அழைத்து சென்று பாதிக்கப்பட்டவரை சந்தித்து பரிதாபத்தைக்காட்டி நிகழ்வுகளை கேட்டு அவருக்கு உண்டான உதவிகளை செய்து தருவதாக ஒப்புக்கொண்டு நம்முடைய வேனை அங்கிருந்து அப்புறப்படுத்துவதில் குறியாக இருந்து காரியத்தை சரியாக முடிக்கவேண்டும் வேன் கிளம்பியதும் முதலாளிக்கு போன் செய்து கண்டேன் சீதையை என அனுமார் ராமனிடம் சொல்வதாக கம்பர் கூருவாரே அது போல் பிரச்சனையை விவரிக்கும் முன்பே பிரச்சனையை தீர்த்துவிட்டேன் என்பதை தெரியப்படுத்தி பின் விளக்கமாக சம்பவத்தை விவரிக்களாம். அதுதான் சமயோஜித புத்தி. இரண்டு நண்பர்கள் ஒருவர் சொந்தமாய் தொழில் நடத்துபவர், மற்றொருவர் அயல் நாட்டில் வேலை செய்பவர் இருவரும் சந்தித்து கொண்டால் அவர்களுடைய உரையாடல்கள் எவ்வாறு இருக்கும் என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.
காத்திருங்கள் வியாழன் வரை...
மு.செ.மு.சபீர் அஹமது
நன்றி : சமூக விழிப்புணர்வு பக்கங்கள்
No comments:
Post a Comment