Latest News

8 ஆண்டுகளாக நோன்பு நோற்கிறேன் : திருமாவளவன்


கடந்த 8 ஆண்டுகளாக ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.

சனிக்கிழமையன்று காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள லால்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முஸ்லிம் சமுதாயத்தினர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் திருமாளவளவனும் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கடந்த 8 ஆண்டுகளாக ரமலான் மாதத்தில் 3 நாள்கள் நோன்பு நோற்று வருவதாகவும் இந்த ஆண்டு கடந்த 3 நாள்களாக நோன்பு நோற்றதாகவும் கடந்த வெள்ளிக் கிழமையுடன் தன்னுடைய நோன்பை முடித்துக் கொண்டதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.