Latest News

  

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுமியை மீட்கும் பணி தீவிரம்



ஹரியானாவில் 70 அடி துளை கிணற்றில் விழுந்த நான்கு வயது சிறுமி உயிருக்கு போராடி வருகிறார். அவரை மீட்கும் பணி இன்று 3 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஹரியானா மாநிலம் குர்கன் அருகில் உள்ள கோ கிராமத்தைச் சேர்ந்த நீரஜ் என்பவரது மகள் மகி, இரு தினங்களுக்கு முன் தனது நான்காவது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளன்று இரவு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, தவறி ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டார்.
சிறுமி சிக்கியுள்ள ஆழ்துளை கிணற்றுக்கு அருகே சம அளவில் குழி தோண்டப்பட்டு மீட்கும் பணி நடந்து வருகிறது. எனினும் புதிதாக தோண்டப்பட்ட குழியையும், ஆழ்துளை கிணற்றையும் இணைக்க தோண்டப்படும் குழியின் பாதையில் பாறைகள் இருப்பதால் பணிகள் தாமதப்படுகின்றன.

அதுமட்டும் இன்றி குழிக்குள் கடுமையான வெப்பம் நிலவுவதால் ராணுவ வீரர்களால் 10 நிமிடங்களுக்கு மேல் அதில் நின்று தோண்டும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், சிறுமி மகி-க்கு குழாய் மூலம் ஆக்சிஜன் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக, அனுமதியின்றி ஆழ்துளை கிணற்றை தோண்டியதாக அதே கிராமத்தைச் சேர்ந்த ரொதேஷ் தயால் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, உயர் மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. இந்த குழந்தைக்கு வேண்டி இறைவனிடம் எல்லோரும் துஃஆ செய்வோம்

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.