Latest News

மது போதைக்காக சானிடைசர் குடித்த ஆட்டோ ஒட்டுநர் பலி. 2 பேருக்கு தீவிர சிகிச்சை!

 

அரியலூர்

அரியலூரில் மதுபோதைக்காக சானிடைசரை குடித்த ஆட்டோ ஓட்டுநர் பரிபாதமாக உயிரிழந்தார். மேலும், இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரியலூர் மேல அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன்(35). ஆட்டோ ஓட்டுநர். இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான மோகன், சரவணன் ஆகியோருடன் சேர்ந்து கடந்த 7ஆம் தேதி போதைக்காக, கைகளை சுத்தப்படுத்தப் பயன்படும் சானிடைசரை குடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, மூவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே இளங்கோவனுக்கு உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு இளங்கோவன் உயிரிழந்தார்.

இனிடையே, மோகன், சரவணனும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.