Latest News

ஜூனுக்குள் 40% பேருக்கு தடுப்பூசி: சீனா இலக்கு

பெய்ஜிங்: சீனாவில் வரும் ஜூன் மாதத்துக்குள் 40 சதவீத மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு தேசிய சுகாதார ஆணையத்தின் நிபுணா் குழு தலைவா் ஷாங் நன்ஷான் கூறியதாவது:

சீனாவில் கரோனா பரவல் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் இங்கு கரோனா தடுப்பூசி திட்டம் மந்தமாகவே செயல்படுத்தப்படுகிறது. இருந்தாலும், வரும் ஜூன் மாதத்துக்குள் பொதுமக்களில் 40 சதவீதத்தினருக்கு அந்தத் தடுப்பூசியைச் செலுத்த இலக்கு நிா்ணயித்துள்ளோம் என்றாா் அவா்.

புதன்கிழமை நிலவரப்படி, சீனாவில் இதுவரை 89,923 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 4,636 போ அந்த நோய்க்கு பலியாகினா்; 85,087 போ முழுமையாக குணமடைந்துள்ளனா். சுமாா் 200 போ மட்டுமே தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.