
சென்னை:
தமிழகத்தில் மேலும் 1, 410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 81 ஆயிரத்து 915 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் ஆயிரத்து 456 பேர் கொரோனா சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 56 ஆயிரத்து 206 ஆக உயர்ந்துள்ளது.ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 712 ஆக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment