
கூடலூர்:
கூடலூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மூர்த்தி (வயது 27). வெல்டிங் தொழில் செய்து வந்தார். நேற்று இவர் பொம்மைய சாமி கோவிலில் திருக்கார்த்திகை விழாவையொட்டி வெல்டிங் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது கோவிலில் அலங்கரிக்கப்பட்டிருந்த வண்ண விளக்கு உடைந்தது. இதில் மின்சார வயர் அறுந்து விழுந்ததில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment