Latest News

பத்தாம் வகுப்பு தனித்தேர்வில் ஆள்மாறாட்டம்! ஒருவர் கைது

விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு தனித்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய புதுவை மாணவர் ஒருவர் பிடிபட்டுள்ளார்.

விழுப்புரம் இ.எஸ் தனியார் பள்ளியில் இன்று 10 ஆம் வகுப்பு கணித பாடத்திற்கு தனித்தேர்வு நடைப்பெற்றது. இதில் புதுவை மாநிலம் முத்தியால்பேட்டை கார்த்திக்(34) என்பவருக்கு பதிலாக, புதுவை மாநிலம் முத்தியால்பேட்டை பொறியியல் மாணவர் கிஷோர்(19) என்பவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி உள்ளார். அவரை பிடித்த மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஏற்கனவே தமிழ், ஆங்கில தேர்வையும் கிஷோர் எழுதியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கிஷோர் மீது விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் மாவட்ட கல்வி அலுவலர் புகார் அளிக்க உள்ளார்

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.