
ஸ்ரீநகர்: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடருக்கு, சீன
மொபைல் நிறுவனத்துக்கு ஸ்பான்சரை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது வியப்பு
அளிப்பதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா
தெரிவித்துள்ளார்.இதுகுறித்த அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: சீன
வீரர்களுடனான மோதல் சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும், சீனப்
பொருட்களைப் புறக்கணிக்கும் கோஷம் எழுந்து வருகிறது. இந்நிலையில், இந்தியன்
பிரீமியர் லீக் தொடருக்கு, சீன மொபைல் நிறுவனமான விவோ ஸ்பான்சரை தொடர
மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சீனாவின் விளம்பரம், முதலீடு, ஸ்பான்ஸர்,
பணம் ஆகியவற்றை எவ்வாறு கையாள்வது என்பதில் நாம் குழப்பமடையும் போது சீனா
நம்மை சீண்டுவதில் ஆச்சரியமில்லை.இதை பார்க்கும்போது, சீன தயாரிப்பு
டிவிக்களை தெருவில் போட்ட உடைத்த முட்டாள்களை நினைத்து நான்
வருத்தப்படுகிறேன்.
சீன நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப் மற்றும் விளம்பரம்
இல்லாமல் நாம் உண்மையில் நிர்வகிக்க முடியாது என்று எப்போதும் சந்தேகம்
கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment