
தமிழகத்தில் இன்று (ஆக.,29) 6,352 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,15,590 ஆக அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் இன்று மட்டும் 80,988 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 46,54,797 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று மட்டும் 6,045 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 55 ஆயிரத்து 727 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 87 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7,137ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 52,726 பேர் சிகிச்சை பெற்று வருகின்ன்றனர்.
No comments:
Post a Comment