Latest News

சென்னையில் 156 பேருக்கு கொரோனா... தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு பாதிப்பு!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால் 738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இன்று ஒரேநாளில் 48 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதில் 600க்கும் மேற்பட்டோர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதாவது சென்னையில் 156பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 60பேருக்கும் திண்டுக்கல்லில் 46 பேருக்கும் திருநெல்வேலியில் 40 பேருக்கும், ஈரோட்டில் 32, திருச்சியில் 36 பேருக்கும்,நாமக்கல் 33 மற்றும் ராணிப்பேட்டை 27, செங்கல்பட்டு 24, மதுரை 24, கரூரில் 23, தேனியில் 39, தூத்துக்குடியில் 17, விழுப்புரத்தில் 20 பேருக்கும் கொரோனா தொற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் திருப்பூரில் 22, கடலூரில் சேலம், திருவள்ளூரில் தலா 13, திருவாரூரில் 12, விருதுநகர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருப்பத்தூர், ஆகிய மாவட்டங்களில் தலா 11, திருவண்ணாமலையில் 9, கன்னியாகுமரி மற்றும் காஞ்சிபுரத்தில் தலா 6 பேருக்கும், சிவகங்கை 5 மற்றும் வேலூரில் 6 பேருக்கும், நீலகிரியில் 4 பேருக்கும், தென்காசி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டத்தில் தலா 3 பேருக்கும், அரியலூர் மற்றும் பெரம்பலூரில் தலா ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 7பேருக்கு கொரோனா அதிகபட்சமாக சென்னையில் 156பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.