Latest News

மகாராஷ்டிராவில் 1000ஐ தாண்டிய கொரோனா பாசிட்டிவ்: இன்று ஒரே நாளில் எத்தனை பேர் தெரியுமா?

மகாராஷ்டிராவில் 1000ஐ தாண்டிய கொரோனா பாசிட்டிவ் தமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்று ஒரே நாளில் 69 பேருக்கு தாக்கியதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தை விட மிக மோசமான கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்டிர மாநிலம் உள்ளது 

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 150 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை முதன்முதலாக தாண்டி உள்ளது. அதாவது அம்மாநிலத்தில் 1018 கொரோனா வைரஸ் பாசிட்டிவ்கள் இருக்கின்றனர் என பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 55 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.