Latest News

  

கொரோனா வதந்தி - கமிஷனர் எச்சரிக்கை !!

மருத்துவ ஆலோசனைகளையும் வெளியிட்டு வருபவர் ஹீலர் பாஸ்கர். சமீபத்தில் அவர் வெளியிட்ட ஆடியோ பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மக்களை கொல்லும் நடவடிக்கை என்றும், அரசு சொல்வதை கேட்க வேண்டாம் என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.

அவரது கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலர் கண்டனம் தெரிவித்தனர். அந்த பதிவை நீக்க வேண்டும் என்றும் பலர் கூறினர். இந்நிலையில் , கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கரை கோவை குனியமுத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர். இது போல் வாட்ஸ் அப் மூலம் வதந்தி பரப்பிய ஈரோடு சித்தோட்டை சேர்ந்த வாசுதேவன் (25), கமலேஷ் (20) மற்றும் வரதராஜ் (35) ஆகியோரை ஈரோடு போலீசார் கைது செய்தனர். 

விசாரணையில் இவர்கள் வாட்ஸ் அப்பில் கொரோனா வைரஸ் பற்றிய தவறான தகவல்களை பரப்பி உள்ளனர் இதனால் உள்ளூர் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் ஆணையர் விஸ்வநாதன் கலந்து கொண்டார்.

அப்போது, கொரோனா அச்சுறுத்தலால் வேறு பல நாடுகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என கூறிய அவர், காவலர்கள் முழு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுடன் பணியாற்றவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
Newstm.in

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.