13 இத்தாலிய சுற்றுலா பயணிகளும் அமித்சரில் தொடர்ந்து தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
சீனாவை
உலுக்கி வரும் கரோனா வைரஸுக்கு (கோவிட் -19) அந்த நாட்டில் இதுவரை 3000
பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்
பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய
நாடுகளிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும்
25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது.
டெல்லி
மற்றும் தெலங்கானாச் சேர்ந்த இருவருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதை
மத்திய அரசு உறுதி செய்தது. டெல்லியைச் சேர்ந்தவர் சமீபத்தில் இத்தாலி
சென்று திரும்பியுள்ளார்.
தெலங்கானாவைச் சேர்ந்தவர் துபாய் சென்று திரும்பியுள்ளார்.
மேலும்
இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் 13
பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. அவர்கள்
பஞ்சாபில் உள்ள அமித்சர் பொற்கோயிலை பார்ப்பதற்காக வந்தனர். அப்போது நடந்த
சோதனையில் கரோனா வைரஸ் தாக்கி இருக்ககூடும் எனத் தெரிகிறது. அவர்கள் தனிமை
படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில்
கரோனா வைரஸ் பரவ இவர்களும் காரணமாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
13 இத்தாலிய சுற்றுலா பயணிகளும் அமித்சரில் தொடர்ந்து தீவிர மருத்துவ
கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இந்தியாவில்
கரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக மத்திய அரசு சில
அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி இத்தாலி, ஈரான், தென் கொரியா
மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து வருவோருக்கு விசா ரத்து
செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment