Latest News

  

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம்!


அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், அதிராம்பட்டினம் ஜாவியா வளாகத்தில் இன்று (18-02-2020) செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம் முகமது அபூபக்கர் தலைமை வகித்தார். அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை, ஹாஜி எஸ்.எம்.ஏ அகமது கபீர் கிராத் ஓதி தொடங்கி வைத்தார்.

இக்கூட்டத்தில், ஜமாஅத்துல் உலமா சபை, அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகள், கட்சிகள் சார்பில், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்பிஆர்) நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (19-02-2020) புதன்கிழமை காலை நடைபெற உள்ள மாவட்ட ஆட்சியரக முற்றுகை போராட்டத்தில், அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் சார்பில், திரளானோர் பங்கேற்பது எனவும், போராட்டக் களத்திற்கு பயணிக்க முதல்கட்டமாக 10 வேன் வாகனங்களுக்கு ஏற்பாடு செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பின் பேரில் ஜாவியா நிர்வாகக் கமிட்டித் தலைவர் எம்.பி அபூபக்கர், அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் பி.எம்.கே தாஜுதீன், எஸ்.எம். முகமது முகைதீன், ஏ.தாஜுதீன், ஜபருல்லாஹ், ஏ.அப்துல் ரெஜாக், பி.எம்.எஸ் அமீன், டி.அகமது அனஸ், இ.வாப்பு மரைக்காயர், பி.ஜமாலுதீன், அகமது அனஸ், எம்.அப்துல் ஜலீல், எம்.நிஜாமுதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  
நன்றி : அதிரைநியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.